புதுதில்லி, ஜன.3- நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 4 மாதங்களில் இல்லாத உச்சத் தைத் தொட்டுள்ளது. அது 7.9 சதவிகி தத்தை எட்டியுள்ளதாக இந்தியப் பொரு ளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) தெரிவித்துள்ளது. 2021 ஆகஸ்டில் நாட்டின் வேலை யின்மை விகிதம் 8.3 சதவிகிதமாக இருந்தது. இது செப்டம்பரில் 6.86 சத விகிதமாக குறைந்தது. ஆனால், அதன் பின்னர் அக்டோபரில் 7.75 சதவிகிதம், நவம்பரில் 7 சதவிகிதம் என முன்னும் பின்னுமாக இருந்த வேலையின்மை விகி தம் டிசம்பரில் 7.9 சதவிகிதமாக அதிக ரித்துள்ளது. இது கடந்த நான்கு மாதங்க ளில் இல்லாத அதிகரிப்பு ஆகும். அதேபோல, 2021 டிசம்பரில் நகர்ப் புற வேலையின்மையும் அதிகரித்துள் ளது.
நவம்பரில் 8.2 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை, டிசம்பரில் 9.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, கிரா மப்புற வேலையின்மை விகிதமும் 6.4 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு மற்றும் சமூக தொலைதூர கட்டுப்பாடுகள், தொற்றாளர்களின் அதி கரிப்புக்குப் பிறகு தெற்காசிய நாடுகளின் பொருளாதார செயல்பாடு மற்றும் நுகர் வோர் உணர்வு பாதிக்கப்பட்டுள்ளதே வேலையின்மை அதிகரிப்புக்கு காரணம் என்று சிஎம்ஐஇ கூறியுள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) என்ற தனியார் நிறு வனமானது, தரவுப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பா ளர்கள் மூலம் வேலையின்மை, பொரு ளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுகளை நடத்தி, அதன் முடிவுகளை மாதந் தோறும் வெளியிட்டு வருகிறது. வேலையின்மை பற்றிய மாதாந்திர புள்ளிவிவரங்களை மோடி அரசு முறை யாக வெளியிடுவதில்லை என்ற நிலை யில், இந்நிறுவனத்தின் அறிக்கையே பல்வேறு தரவுகளை வழங்கி வரு கிறது.