தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டில் நடந்த நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகர மேயர், 125 நகர மன்ற தலைவர்கள், 529 பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் நேரடி வாக்குகள் மூலம் மக்களே தேர்வு செய்தனர். துணைத் தலைவர்களுக்கு மட்டும் மறைமுக தேர்தல் நடை பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தேர்தலை நடத்தா மல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தது. பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் அழுத்தம் காரணமாக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் (புதிதாக உருவாக்கப் பட்ட ஒன்பது மாவட்டங் களைத் தவிர) தேர்தலை நடத்தியது. முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் நகர்ப் புறங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும், புதிதாக 11 மாநகராட்சியும் 13 நகராட்சி யும் உருவாயின. அதேநேரத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, திமுக ஆட்சியில் 21 மாநகராட்சிக ளில் 1,374 வார்டு உறுப்பினர்கள், 138 நகராட்சிக்கான 3,843 கவுன்சிலர்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் கள் என்று தேர்தலை நடத்தி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 12,838 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியும் ஏற்றுக் கொண்ட னர். மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற மாநகர மேயர்கள், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களும் அன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இட ஒதுக்கீடும்- மறுமலர்ச்சியும்!
பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதால், கடந்த காலங்களைக் காட்டிலும் பெண் பிரதிநிதிகள் அதிகமாக வெற்றி பெற்றனர். அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் முதன் முதலாக தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளனர். படித்தவர்கள், பட்டம், பட்ட மேற்படிப்பு முடித்த இளம் பெண்களும் ஆண்களும் பெருமளவில் கவுன்சிலர்களாகவும் தலைவர்களாக வும் வெற்றி பெற்றுள்ளனர்.
கருகிய ஆணிவேர்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த கால வரம்புக்குள் அதிமுக அரசு தேர்தலை நடத்த தவறியதால் மாநில நிதிக்குழு மானியம், சிறப்பு நிதி என பலவும் மடை மாற்றம் செய்யப்பட்டது. போதாக் குறைக்கு, 2018ஆம் ஆண்டில் மட்டும் 3558 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு முடக்கி வைத்தது. அதுமட்டுமா? உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டியிருந்த மானியத்தையும் நிறுத்தி ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளை கருகச் செய்தது.
முத்திரை பதிக்கும் வரலாறு!
ஈரோடு நகராட்சியின் தலைவராக பெரியார் ஈவேரா பதவி வகித்த போது 1919 ஆம் ஆண்டில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையை கொண்டுவந்தது இன்றளவும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. நாட்டின் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சிக்கு 1996ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் மேயராக பதவி வகித்தபோது புரசைவாக்கம் நெடுஞ்சாலை - ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை - காந்தி மண்டபம், பீட்டர்ஸ் சாலை -கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பு, டி.டி.கே.சாலை - சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு என்று 10 இடங்களில் மேம்பாலங்களை கட்டிமுடித்து மக்க ளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 2001ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.
நவீனமும்-சுதந்திரமும்!
தற்போது பொறுப்புக்கு வந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் தலைவர்களும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக, இணைய வலைதளங்களை நவீன தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொது சுகாதா ரம், துப்புரவு பிரச்சனையாக இருந்தாலும் சாக்கடை அடைப்பு, குடி தண்ணீர் விநியோகமாக இருந்தாலும் சீரமைக்க முடியும். ஒன்றிய-மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களையும் எளிதில் கொண்டு சென்று சேர்க்க முடியும். தெருவிளக்கு, சாலை வசதிகள் ஏற்படுத்தல், கல்வி மேம்பாடு, பூங் காக்கள் மற்றும் கட்டடங்கள் பராமரித்தல், கட்டடங்கள் கட்டுவதை ஒழுங்குபடுத்தி தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவது. அனைத்து நிலையிலும் சொந்த நிதி ஆதாரங்களை அதிக ரிப்பது உள்ளிட்ட பணிகளையும் நமது அரசியல் அமைப்பு வழங்கியி ருக்கும் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.