tamilnadu

img

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பித்தல்

சென்னை, பிப்.20- தமிழ்நாட்டில் 2023-2024-ஆம் ஆண்டில், 100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்புகளைப் புதுப்பிக்க, 47 கோடியே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று வருகின்றன என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல்  செய்த பட்ஜெட்டில் இடம்பெற் றுள்ள இதர அறிவிப்புகள் வருமாறு: 2024-2025-ஆம் ஆண்டில் 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கட்டமைப்பு வசதி கள், ரூ.50  கோடி மதிப்பீட்டில்  புதுப்பிக்கப்படும். புவிசார் குறியீடு     புவிசார் குறியீடு பெறப்பட்ட  பொருட்களை சந்தைப்படுத் துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதி கரிக்கும்.  எனவே, நமது மண்ணின்  அடையாளங்களான மாநிலத் தின் தனித்துவமான 25 வேளாண் விளை பொருட்களுக்குப் புவிசார்  குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இதேபோல், 2024-2025-ஆம்  ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லி மலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (ராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப் பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி)   விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட் களுக்குப் புவிசார் குறியீடு,  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பெறப்படும்.   விவசாயிகளை ஏற்றுமதியாளராக்குதல் பல்வேறு மாவட்ட விவசாயி களின் கோரிக்கைக்கிணங்க, மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி  ஆகிய வற்றைப் பயிரிடும், அப்பீடா பயிற்சி பெற்ற நூறு விவசாயி களைத் தேர்வு செய்து, அவர்களை நூற்றுக்கு நூறு  ஏற்றுமதியாளர்களாக மாற்று வதற்கான உரிய சான்றிதழ் களைப் பெற்றுத்  தரும் பொருட்டு,  ஒரு நபருக்கு ரூ.15,000 வீதம்  ரூ.15  லட்சம் மாநில அரசு நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்.