tamilnadu

img

மே 17-இல் தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு விழா

மே 17-இல் தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு விழா

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்கிறார்

திருவாரூர், மே 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதும்பெரும் தலைவர் கோ.வீரய்யன் சிலை திறப்பு விழா- பொதுக்கூட்டம் சிபிஎம் திருவாரூர் மாவட்டக் குழு  சார்பாக மே 17 ஆம் தேதி குடவாசல் கட்சி அலுவலகத்தில் தியாகி சி.தங்கை யன் நினைவகத்தில் நடைபெறுகிறது. மக்கள் போற்றும் ஒப்பற்ற தலைவர்,  விவசாயிகளின் விடிவெள்ளி, கட்சி  மற்றும் வர்க்க பகுதியான அரங்கத்தில்  மாநில அளவில் பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சிபிஎம் சட்டமன்ற  உறுப்பினராக மக்கள் பணியாற்றிய வர். அனைவராலும் அன்புடன் ஜிவீ  என அழைக்கப்பட்ட சித்தாடி கோ.வீரய் யன் நினைவை போற்றும் வகையில், குடவாசல் கட்சி அலுவலகத்தில் மே 17  அன்று மார்பளவு சிலை நிறுவப்பட உள்ளது.  சிலை திறப்பு விழாவில், சிபிஎம்  மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம் பங்கேற்று, தோழர் கோ.வீரய்ய னின் சிலையை திறந்து வைக்கிறார். நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் கலந்து கொள்கின்ற னர். இந்நிகழ்வையொட்டி, மாலையில் குடவாசல் சீரணி அரங்கத்தில் 24 ஆவது  அகில இந்திய மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறு கிறது. அந்த வகையில் குடவாசல் ஒன்றிய,  நகரப் பகுதிகளில் உள்ள கட்சி ஆதர வாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள், வர்த்தகர்களிடம் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.அன்பழகன், தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.லட்சுமி உள்ளிட்டோர் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.