tamilnadu

img

ஊதியம் வழங்காததைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, பிப். 7- உதவி பெறும் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன்பு திங்களன்று (பிப். 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தின் தலைவர் ஜே.காந்திராஜ், பொதுச் செய லாளர் எம்.கிருஷ்ணராஜ், பொருளாளர்  ஏ.சேவியர் செல்வகுமார் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு யுஜிசி நெறிமுறை 2018இன் படி எம்.பில் மற்றும் பிஎச்டிக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கு வதற்கு ஏதுவாக அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும், பேராசிரியர் பணியிடத்திற்கான ஆணையை வழங்க வேண்டும்,

உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், இணைப் பேராசிரியருக்கு பி.எச்டி கட்டாய நிபந்தனையை தளர்த்த வேண்டும், புத்தொளி மற்றும் புத்தாக்க பயிற்சி முடிப் பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு உதவிப் பெறும் கல்லூரியில் பணி யாற்றும் ஊழியருக்கும், ஆசிரியருக்கும் 2023 ஜனவரி மாதத்தின் உழைப்பிற்கான ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்காமல்  காலம் தாழ்த்தி வருவது வேதனை யளிக்கிறது. மாதாந்திர ஊதியத்தில் மட்டுமே  வாழ்க்கை நடத்தும் அலுவலரின் ஆசிரியரின்  ஊதியத்தை உரிய காலத்தில் வழங்காமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரி களையும் நிதித்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பிரச்சனையில் முதல மைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.