ஒன்றிய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி யுள்ளது. அந்தச் சட்டங்களை தொழிலாளர் நலன் பாதிக்கப்படாத வகையில் விதிகளை வகுப்பதற்கான தொழிற்சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், துறைச் செயலர் கிர்லொஷ் குமார் மற்றும் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.