tamilnadu

img

நவ.26-ல் மோடி அரசை கண்டித்து சென்னை கோட்டை நோக்கி பேரணி

திருச்சிராப்பள்ளி, அக்.30- திருச்சி ப.மாணிக்கம் இல்லத்தில் ஐக் கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாநில பொதுக்குழு  கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.   கூட்டத்தில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தில்லியில் போராடிய விவ சாயிகளிடம் கொடுத்த வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஆதாரவிலை, கொள்முதல், இலவச மின்சாரம் உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கைகளின் மீதும் நடவடிக்கை எடுக்  காததை கண்டித்து நவம்பர் 26-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் ஐக்கிய  விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடை பெறவுள்ளது.  கூட்டத்தில், தமிழக ஆளுநரின் எதேச் சதிகார போக்கை கண்டித்தும், ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து செய்து  வரும் துரோகத்தை கண்டித்தும் ஆளுநர்  மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம்  நடத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விவ சாய தொழிலாளர்கள் சங்கம் மாநிலச் செய லாளர் அ.பழநிசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் மாசிலாமணி, மக்கள் அதிகாரம் அமைப்பு மாநிலப் பொருளா ளர் காளியப்பன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு  உறுப்பினர் மேரி, திருச்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அயிலை சிவசூரியன், சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.