tamilnadu

img

‘தனித்துவம் நமது உரிமை’ ‘பன்மைத்துவம் நமது வலிமை’

தேனி, பிப்.28- ‘தனித்துவம் நமது உரிமை’ ‘பன்மைத்துவம் நமது வலிமை’ என்ற  முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஆகஸ்ட் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கம்பத்தில் பிப்ரவரி  26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானம் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா  செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தா ண்டத்தில் ஆகஸ்ட் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தனித்து வம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கிறது. பண்பாட்டு தளத்தில் இதன் முக்கியத்து வத்தை அறிந்து ‘தனித்துவம் நமது உரிமை’  ‘பன்மைத்துவம் நமது வலிமை’ என்ற முழக்கத்துடன் கிளை  மாநாடுகள் துவங்கி, மாவட்ட மாநாடு, மாநில மாநாடு என நடைபெறும். தென்முனையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி குமரியில் நடைபெறும் இந்த மாநாட்டினை காஷ்மீர் மாநி லத்தின் மக்கள் போராளி யூசுப் தாரி காமி, கேரளாவின் முன்னணி திரைக் கலைஞர் மம்மூட்டி உள்ளிட்டவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம்

தமிழக கல்விக் கொள்கையை அறிவித்திடுக!

தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. தமுஎகச சார்பில் திருச்சியில் இதற்கு  எதிராக 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாநாட்டினை நடத்தினோம். மாநாட்டில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். தேசிய கல்வி கொள்கை கற்காலத்திற்கு கொண்டு செல்லும், சனாதனத்திற்கு ஆட்படுத்தி கல்வி மறுக்கப்படும். தமிழக அரசும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது போதுமானதாக இருக்காது.  தமிழக பண்பாட்டை உள்ளடக்கிய, மாநிலத்தின் தேவையை உணர்ந்து, மாநில கல்விக் கொள்கையை உரு வாக்க வேண்டும். அதற்காக தமுஎகச முதலில் குரல் கொடுத்தது. தமிழக அர சும் மாநில கல்விக் கொள்கையை உரு வாக்குவதாக அறிவித்தது. அதனடிப் படையில் கல்வி கொள்கையை உரு வாக்க ஆக்கப்பூர்வமான குழுவை உரு வாக்க வேண்டும். மேலும் கல்வி பட்டி யலை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ்- சாகாவிற்கு தடை விதித்திடுக!

ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி நிறுவனங்களில் சாகா என்ற பெயரில் பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் பிற மதங்களுக்கு எதிராக துவேசத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பூங்கா போன்ற பொது வெளிகளில் யோகா, சிலம்பாட்டம், வீரவிளையாட்டு என்ற பெயரில் இந்துத்வா மதவெறியை ஊட்டி வருகிறார்கள். தமிழகத்தில் பொது வெளி மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும். எனவே, கல்வி நிறு வனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் சாகாவை தடைசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்கல்விக்கு முன்னுரிமை

தமிழகத்தில் உயர்கல்வி பரவ லாக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கம்பம், மயி லாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கல்வி பயில வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மேற்கல்வி  பயிலும் மாணவர் எண்ணிக்கை கணிச மாக குறைந்து வருகிறது. எனவே, கல்லூரி இல்லாத இடங்களில் தமிழக அரசு, அரசு கலை -அறிவியல் கல்லூரி களை துவக்க முன்வரவேண்டும்.

வரலாற்று மோசடியில் பாஜக

புத்தக பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. சனிக்கிழமை அங்குள்ள அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப் படங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிய அமைச்சர் எல்.முருகனால் திறக்கப் பட்டது. அந்த கண்காட்சியில் சுதந்திர  போராட்டத்தில் ஈடுபடாத சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி,  தீனதயாள் உபாத்தியாயா போன்ற வர்களின் படம் இடம்பெற்றுள்ளது. இது போன்ற வரலாற்று மோசடிகளை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். புத்தக கண்காட்சி என்பது பபாசி என்ற சுயேட்சையான அமைப்பு, தமிழக அரசின் நிதி ஆதாரத்தோடு நடத்தி வரு கிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஐ.தமிழ்மணி, மாநிலக்குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.