tamilnadu

இதய நோய்களை தடுக்க ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைகளில் பரிசோதனை

புதுதில்லி,மார்ச் 26- இதயநோய்களை தடுக்க ஆரம்ப நிலையிலேயே ஆரம்ப சுகாதார நிலை யங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்படுகிறது என்று ஒன்றிய  அரசு பதிலளித்துள்ளது.  தமிழகத்தில்  2016 ஆம் ஆண்டு இஸ்கிமிக் இதய நோயால் பல அகால  மரணங்கள் ஏற்பட்டன. அகால மரணங் களை ஏற்படுத்தும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்க  ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை கள் என்ன என்று திமுக எம்.பி.  தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவை யில் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்  அளித்த பதிலில் , ”ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங் கள் மற்றும் மாவட்ட மருத்துவமனை களில் இதய நோய் குறித்து ஆரம்பத்தி லேயே சோதனை நடத்தப்படுகிறது. தாய்மார்களுக்கு ஏ.என்.சி. எனப்படும் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் முன்கூட்டியே இஸ்கிமிக் வகை இதய நோயை கண்ட றிய முடியும். தனியார் மருத்துவர்க ளுக்கும் இதில் பங்களிப்பு இருக்கிறது. மேலும், என்.டி.சி. கிளினிக்குகள் மூலமும் நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இஸ்கிமிக் இதய நோய் என்பது (ischemic heart disease) ரத்த தமனி கள் சுருங்குவதால் ஏற்படும் இதய நோய்களைக் குறிப்பிடும் மருத்துவப் பெயர். இதயத்தின் தமனிகள் சுருங்கு வதுபோல் இதயத்திற்குச் செல்லும் ரத்தத் தின், ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்கள் ஏற்படும்.