திருப்பூர்,ஜன.12- திருப்பூரில் ஜனவரி 12 புதனன்று மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமின்றி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகளும் நடை பெற்று வருகின்றன. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும். அந்த மருத்துவமனையில் தமிழக மக்கள் சிகிச்சை பெறுவார்கள். தமிழ்நாட்டில், ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது. டெக்னாலஜி அப்கிரேடசன் மட்டுமே நடக்கின்றது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி வானொலி நிலையங்களை மூடும் முடிவைக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், வானொலி நிலையங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.