tamilnadu

img

துணை ஜனாதிபதி வேட்பாளர் ஆல்வாவின் சிம்கார்டு முடக்கம்!

புதுதில்லி, ஜூலை 26 - “தமது மொபைலில் இருந்து அழைப்புக் களை மேற்கொள்ளவோ அல்லது பெறவோ முடியவில்லை” என்றும், திங்கட்கிழமையன்று நாள் முழுவதும் தமது சிம்கார்டு முடக்கப் பட்டதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா குற்றச்சாட்டு எழுப்பி யுள்ளார். பாஜக, திரிணாமுல், பிஜூ ஜனதாதளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, வாக்கு சேகரித்த பின்னரே தனது மொபைல் முடக்கப்பட்டதாகவும் மார்க்கரெட் ஆல்வா குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் -எம்டிஎன்எல் நிறுவனம், மார்க்க ரெட் ஆல்வா-வின் மொபைல் எண்ணுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், உங்க ளின் எம்டிஎன்எல் கேஒய்சி (MTNL KYC) தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள்  எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளா விட்டால் 24 மணி நேரத்திற்குள் எங்களின் சிம்கார்டு முடக்கப்படும் என்று கூறியுள்ளது. அதன்படியே சிம் கார்டை முடக்கியதாகவும் தெரிகிறது.

இந்த கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள மார்க்கரெட் ஆல்வா, பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிர்வாகத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை டுவிட்டரில் வெளி யிட்டுள்ளார்.  அதில், “அன்புள்ள பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல், திங்களன்று பாஜக-வில் உள்ள சில நண்பர்களிடம் பேசிய பிறகு, எனது மொபை லுக்கான அனைத்து அழைப்புகளும் திருப்பி விடப்படுகின்றன, மேலும் என்னால் அழைப்பு களைச் செய்யவோ அல்லது பெறவோ முடிய வில்லை. தொலைபேசியை மீட்டெடுத்தால், இன்று இரவு பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த  எந்த எம்.பி.யையும் அழைக்க மாட்டேன் என்று  உறுதியளிக்கிறேன்” என்று காட்டமாக குறிப் பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத்  தலைவர் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு ஒன்றிய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனி மறுப்பு  தெரிவித்துள்ளார். “மனச் சோர்வடைந்தவர்களே இது போன்ற விஷயங்களைப் கிளப்புகிறார்கள். மார்க்கரெட் ஆல்வாவின் போனை ஒட்டுக் கேட்பதால் என்ன பயன்? அவருக்கு வெற்றிக் கான வாய்ப்புகளே இல்லை என்பதால், விரக்தி யில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடு கிறார்” என்று குற்றச்சாட்டை உதாசீனப்படுத்தி யுள்ளார்.