- நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித் தாடுவதாக, மோடி அர சின் மீது பல்வேறு குற்றச் சாட்டுகள் உள்ளது. இந் நிலையில், 2018 - 19ஆம் ஆண்டுகளிலும், 2021 - 22ஆம் ஆண்டிகளிலும் இந்திய ரயில்வேயில் பல் வேறு நிலைகளிலான பணியிடங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.
- வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட அசாம் மக்களுக்கு மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் நிவாரணப் பொருட்களை திங்க ளன்று அனுப்பி வைத் தார். இம்பாலில் உள்ள காங்லா கேட்டிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாக னங்களை அவர் கொடிய சைத்துத் துவக்கி வைத்தார்.
- நாட்டின் முன்னனி பொதுத் துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி, 1800 1234 அல்லது 1800 2100 என்ற இலவச உதவி எண்கள் மூலம் கணக்கு வைத்திருக்கும் 44 கோடி வாடிக்கையாளர்களும், வீட்டிலிருந்தே அதுவும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட வங்கிச் சேவையை பெற முடியும் என தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
- உத்தரகாண்ட் மாநிலத் தில் கேதர்நாத் பகுதி முழு வதும் மேகமூட்டம் சூழ்ந்து பனிப்போர்வை யில் மூழ்கியுள்ளது. அங்கு வானிலை ஆய்வு மையத் தின் தரப்பிலிருந்து மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் ஏரா ளமான பக்தர்கள் கேதர் நாத் வந்துள்ளனர்.
;