ஆழித்தேரோடும் வீதிகளில் புதைவட கேபிள்கள் அமைப்பு
திருவாரூர், மே 8 - திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழ வீதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.2.19 கோடியில் ஆழித்தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலை மின் கம்பி களுக்கு பதிலாக புதைவட கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக் கோயில் ஆழித்தேரோட்டத்தின்போது தடையில்லா மின்சாரம் வழங்கவும், ஆழித்தேர் திருவிழாவில் பக்தர் களுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க வும், திருவாரூர் கோட்டத்தில் உள்ள மேல் நிலை மின்கம்பியாக உள்ள, தாழ்வ ழுத்த மின் பாதையை புதைவட கேபிள் களாக மாற்றும் பணி முடிவுற்றள்ளதை தொடர்ந்து வியாழக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோக னச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேற்பார்வை பொறியாளர் லதா மகேஷ்வரி, செயற்பொறியாளர் (பொது) காளிதாஸ், செயற்பொறியா ளர் செந்தமிழ் செல்வி, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில், நகராட்சி ஆணையர் தாமோ தரன், பணி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.