ஐ.நா. அவைக்கு பெண் தலைவர் நியூயார்க்
, ஜூன் 4 - ஐ.நா. அவைக்கான புதிய தலைவர் தேர்தலில் ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் வெற்றி பெற்றுள் ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற 88 வாக்குகள் தேவை யான நிலையில் பேர்பாக் 167 வாக்குகளைப் பெற்றார். இது வெற்றி பெறுவதற்கு தேவையானதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். அன்னலெனா பேர்பாக்கை எதிர்த்து போட்டியிட்ட ஜெர்மன் தூதர் ஹெல்கா ஷ்மிட் 7 வாக்குகளைப் பெற் றார். இந்த தேர்தலில் 14 நாடுகள் வாக்களிக்கவில்லை.
நாளை முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பம்
சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் இளங் கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவப் படிப்பு களுக்கு (PDS)ஜூன் 6 முதல் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவித்திருக்கிறார்.
பண்டிகை கால முன்பணம் உயர்வு
சென்னை, ஜூன் 4 - தமிழ்நாடு அரசு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதி யர்கள், தனி ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பண்டிகைக் கால முன்பணம் ரூ. 4 ஆயிரத்தி லிருந்து 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படும் விதமாக அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 4 - “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிக மாக இருந்தாலும் வீரியம் இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளி களில் முகக் கவசம் அணி வதற்கு உத்தரவிடப்படும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திருச்சி யில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.