கீவ், பிப்.21- உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவம் குண்டு மழை பொழிந்ததாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக் கப்போவதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இதைக் காரணம் காட்டி ஆயுதங்களை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்து வரு கிறார்கள். 16 ஆம் தேதி ரஷ்யா படையெ டுக்கும் என்று சொன்ன அமெரிக்கா, தற்போது படையெடுக்கும் எண்ணத்தில் தான் ரஷ்யா இருக்கிறது என்று சொன்ன தையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. உக்ரைனின் சிறிய நகரங்களில் ஒன்றான டோகுசாவ்ஸ்க் மற்றும் சைட்சேவோ கிராமம் ஆகியவற்றின் மீது உக்ரைன் படைகள் குண்டுகள் வீசி யுள்ளன. உக்ரைனில் உள்ள அரசு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்தி ருக்கிறது. '
டான்பாஸ் பகுதி உக்ரைனில் இருந்தாலும் அதில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யர்களாவர். ரஷ்யாவுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அமைப்புகள் உக்ரைனின் தாக்குதல்க ளைக் கண்டித்துள்ளன. உக்ரைனில் இருந்து வெளியேறு கிறோம் என்று அறிவித்துத் தங்களை குடியரசுகள் என்று டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரண்டு பகுதிகள் பெயரிட்டுக் கொண்டுள்ளன. இதைப் பிரிவினைவாதம் என்று குற்றம் சாட்டும் உக்ரைன், சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசியுள்ளது. டான்பாஸ் பகுதியிலிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அரசு எதிர்ப்பு அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. உக்ரைனின் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட வருமாறு மக்கள் அனைவருக்கும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் வெடித்த சில குண்டுகள் ரஷ்யப் பகுதிக்குள் விழுந்ததாகவும் செய்திகள் வெளியா கின்றன. இந்தத் தாக்குதல்களால் சில பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குடி யிருப்புகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர். இவர்களில் பலர் பாதுகாப்புக் காக ரஷ்யாவுக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.