tamilnadu

போர் பதற்றத்தை உருவாக்காதீர்கள் நேட்டோ நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்

கீவ், ஜன.29- பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி நேட்டோ நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரஷ்யா, உக்ரைன் மீது உடனடியாக போர் தொடுக்கலாம் என எச்சரிப்பது நாட்டின் பொருளாதாரத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது என அவர் கூறினார். “மதிப்புக்குரிய பல நாட்டுத் தலைவர்களிடமிருந்து கூட சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாளை போர் நடக்கும் என்று அவர்கள் போகிற போக்கில் கூறுகிறார்கள். இது அச்சத்தை ஏற்படுத்துகிறது, இது எங்கள் நாட்டை எந்த அளவுக்கு பாதிக்கிறது தெரியுமா?” என்று உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறினார். நாட்டுக்குள் நிலையற்ற சூழல் நிலவுவதுதான் உக்ரைன் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.