உதகை, மே 22- 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனை நினைவுகூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சிய ராக பணிபுரிந்தார். இவரால் 1819 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டு பிடிக்கப்பட்டது. இயற்கை சுற்றுச்சூழ லில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் சல்லிவன் இந்த பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் ஏராளமான குடியேற்றங் களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்த பகுதிக்கு சென்றுவர 1820 ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையையும் ஏற்படுத்தினார். பின்னர், ஐரோப்பிய, தென்னாப்பி ரிக்க நாடுகளில் இருந்து பல வகை யான மலர்கள், காய்கள், பழம் தரும் மர வகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டு, ஊட்டி நகரின் நடு வில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் உரு வாக்கினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர் வளத்தை உறுதி செய்தார். இதன்பின் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜான் சல்லிவன் 1841 ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும் பினார். 1855 ஆம் ஆண்டு தனது 66 ஆம் வயதில் காலமானார். இந்நிலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியை கட்டமைத்த பெரு மைக்குரிய ஜான் சல்லிவனை நினைவு கூரும் வகையில் உதகை அரசு தாவர வியல் பூங்கா சாலையில் அவரது மார்ப ளவு வெண்கலச் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், ஜான் சல்லிவன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து புத்தகமாக தொகுத்த நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்ம லிங்கத் திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன் னாடை அணிவித்து கவுரவித்தார்.