tamilnadu

img

அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, டிச.14- சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமை ச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஆளுநர் மாளிகையில் புதனன்று (டிச.14)  நடைபெற்ற  விழாவில் ஆளுநர் வி. என். ரவி  அவருக்கு பதவிப் பிரமாண மும் ரகசிய பாதுகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங் களவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.  பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவு இடங் களுக்குச் சென்று மரியாதை செலுத்தி னார். அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்ற உதயநிதிஸ்டாலின், அங்கு அவ ருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் அமர வைத்தார்.

முதல்வர் கோப்பை கபடிக்கு ரூ.47 கோடி

இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதன்படி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தி லிருந்து ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள் ளது. மேலும் 2022-23 ஆம் ஆண்டு முத லமைச்சர் கோப்பைக்கான போட்டி நடத்துவதற்கான கோப்பிலும் கையொப்ப மிட்டார். இதன்படி, ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஓய்வூதியம்

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் எச். ஜாஃபர், கே. கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி ஏ.கிறிஸ்டோபர் (கபடி), சேலம் பொன்சடை யன், கோவை எஸ். ஜெகந்நாதன், தென்காசி ஆர். குத்தாலிங்கம் (வலு தூக்குதல்), திருவாரூர் வி.கோவிந்தராஜ் (பளுதூக்கும்) கோவை பூஏ.எல். கலீல்ரகு மான் (பூப்பந்து) எஸ். சிவராஜன்(சதுரங் கம்) ஆகிய ஒன்பது விளையாட்டு வீரர் களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்குவதற்கும், ஆயுட்காலம் வரை  மாதம் ரூ.6000 ஓய்வூதியம் வழங்கு வதற்கான கோப்பிலும் கையொப்பமிட்டார். சர்வதேச ஜூனியர் உலக சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவை நிவேதாவிற்கு ரூ. 4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கு வதற்கான கோப்பிலும் அமைச்சர் உதயநிதி  கையொப்பமிட்டார்.