சென்னை, மே 3- மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறுகுறு நடுத்தர தொழில்கள் அழிந்து வருவதாக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவருமான ஏ.எஸ்.கண்ணன் கூறினார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் திங்களன்று (மே 2) புதிய அலு வலகத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கி னார். டான்ஸ்டியா முன்னாள் தலை வர் கே.வி.கனகாம்பரம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். சிட்கோ கிளை மேலாளர் ஆர்.பாரதி குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.கண்ணன் பேசு கையில், ஒன்றிய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றால் சிறு குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்களில் இருந்து ஜாப் ஒர்க் எடுத்து செய்கிறோம். அதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி வசூ லிக்கப்படுகிறது.
மூலப் பொருட்களின் விலை உயர்வு, இரும்புத்தாது, நிலக்கரி விலை, மின்சாரக்கட்டணம், போக்கு வரத்துக் கட்டணம், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகியவற்றை சார்ந்ததாக உள்ளது. இந்தியாவில் முன்பு இரும்பு முதல் ஈயம் வரை மற்றும் உலொக மூலப் பொருட்களின் விலையை அரசு அமைத்த கமிட்டி யால் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்த முறையை தற்போதுள்ள ஒன்றிய மோடி அரசு மாற்றி விட்டது. லண்டனில் உள்ள மூலப்பொருட்கள் விற்பனை மையம் அறிவிக்கும் விலை யின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களும், சந்தைகளும் தினசரி விலை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்தியாவில் நிலக்கரி விலை, சர்வதேச நிலக்கரி விலை சார்ந்ததாக நிர்ணயிக்கப்படுகிறது.
மூலப்பொருட்களின் கட்டுப் பாடில்லாத விலை உயர்வால் சிறு குறுந் தொழில்கள் அழிந்து வரு கின்றன. முத்ரா திட்டம் மூலம் பிணை இல்லாமல் கடன் வழங்கு வதாக அரசு அறிவித்தாலும் அது சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சிறு குறு நிறுவனங்களுக்கு எந்த கடன் தள்ளுபடியும் செய்யப்படுவதில்லை. கொரோனா பொதுமுடக்கத்தால் லட்சகணக்கான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை எதிர்த்து சங்க வித்தியாசமில்லாமல், சாதி, மதம், மொழி கடந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் சிறு குறு நிறுவனங்களை எதிர்வரும் காலங்களில் பாதுகாக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் டான்ஸ்டியா பொதுச்செயலாளர் நித்யானந்தம், முன்னாள் தலைவர்கள் ஏ.சண்முக வேலாயுதம், பாபு, முன்னாள் பொதுச் செயலாளர் சி.கே.மோகன், டாக்ட் துணைத்தலைவர்கள் கே.ராஜா, பெருமாள், ஆர்.பரசுராமன், போஸ், கோவை n ஜ.ஜேம்ஸ், பிரதாப், திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் வி.மணி வண்ணன், டிக் மண்டல இணை இயக்குநர் என்.இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்ட் பொதுச்செயலாளர் ஆர்.மதிமுகம் வரவேற்றார். பொருளாளர் எஸ்.ஆத்மநேசன் நன்றி கூறினார்.