tamilnadu

img

கேரளாவின் உண்மைக் கதை - ஹிரா மசூதியில் பாரதி அம்மா!

பாரதி அம்மா, ஓய்வு பெறுகிறார்! ஆமாம், கேரள மாநிலம், ஆலுவா,  ஸ்ரீமூலநகரம் ஹிரா மசூதி, நிர்வாகிகள், முதுமை காரணமாக ஓய்வு பெறும் பாரதி அம்மாவை (73வயது) வழியனுப்பி வைத்தனர். 25வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த பாரதி அம்மா, ஹிரா பள்ளிவாசலுக்கு வெளியே நின்று  வணங்கிச் செல்வது வழக்கம்; பிறகு  பள்ளிவாசல் வளாகத்தை சுத்தம் செய்து வந்த பாரதி அம்மா, தொடர்ந்து, பள்ளி வாசலுக்கு உள்ளேயும் தூய்மைப்படுத்தி வந்தார். பள்ளி வாசல் நிர்வாகத்திடம் ஊதியம் இவ்வளவு வேண்டும் என்று பேசவில்லை, பாரதி அம்மா... அவரைப்  பொறுத்தவரை, அவருக்கு அது, இறைப்பணி. ஆனாலும், பள்ளிவாசலுக்கு வரும், ஒவ்வொரு வரும், பாரதி அம்மாவின் கைகளில்  கொஞ்சம் பணத்தை, வைத்து அழுத்துவதும், பாரதி அம்மாவும், கைகளைப் பொத்தியவாறே, அந்த பணத்தை பெற்றுக் கொள்வதும், அன்றாட நிகழ்வு தான். “இதை வைத்து தான், நான் எனது இரண்டு மகன்களை யும் வளர்த்து, ஆளாக்கினேன் “என்று நெகிழ்ச்சியுடன் கூறும் பாரதி அம்மா, இந்த வேலை, எனக்கு கிடைத்த கடவுளின் ஆசீர்வாதம்”என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து 21 ஆண்டுகளாக பணியாற்றிய பாரதி  அம்மா, முதுமை காரணமாக ஹிரா மஸ்ஜித் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நாளன்று, அவருக்கு வழியனுப்பு விழா நடை பெற்றது. பள்ளி வாசலுக்கு, தொழுகைக்கு வருபவர்களின், தாயாகவும், பாட்டியாகவும், சகோதரியாகவும் திகழ்ந்த, பாரதி அம்மா, இந்த பள்ளி வாசலிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, அவருக்கு, என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை நாங்கள் தொடர்ந்து செய்வோம்,  அவரது வீட்டிற்கே சென்று ஒப்படைப்போம் என்று, பள்ளி வாசல் நிர்வாகி, பேசும் போது குறிப்பிட்டார். என்ன தான், மதவெறி சக்திகள் தலை கீழாக நின்றாலும், இந்த மண்ணின் மாண்பை, எவரும் சிதைக்க முடியாது. இது கேரளாவின்  உண்மைக் கதை.