tamilnadu

லாரி மோதி சிறுமி பலி 

 மதுரை, நவ.19-  மதுரை கூத்தியார்குண்டு அருகே உள்ள மூனாண்டி பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு தர்ஷிகா (8) என்ற மகளும், கதிர் (6) என்ற மகனும் உள்ளனர். தர்ஷிகா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பும், கதிர் 2-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். சனிக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் கப்பலூர் இந்திரா நகரில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்றிருந்துள்ளனர். ஞாயிறு இரவு குழந்தைகள் இருவரையும் அவர்களது உறவினர் சஞ்சய்குமார் (19) இருசக்கர வாகனத்தில் மூணாண்டி பட்டிக்கு அழைத்து வந்துள்ளார். கூத்தியார்குண்டு- கப்ப லூர் காலனி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தர்ஷிகா லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சஞ்சய், கதிர் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு மங்கலம் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.