tamilnadu

img

தோழர் பி.மருதப்பா காலமானார்

புதுக்கோட்டை, பிப்.1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குன்றாண்டார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளர் தோழர் பி.மருதப்பா (72) திங்கள்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளராக மூன்று முறை செயல்பட்டவர் மருதப்பா. கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். தற்பொழுதும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை யில் இருந்து வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தோழர் பி.மருதப்பா திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். தோழர் மருதப்பாவின் உட லுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமை யன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்மு கம், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றி யச் செயலாளர் எஸ்.கலைச்செல் வன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். பீமராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ் சலி செலுத்தினர். கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி, விவசாயத் தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தோழர் மரு தப்பாவிற்கு ராமாமிருதம் என்ற மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.