tamilnadu

img

திருத்தணியில் பட்டியலின - பழங்குடி மக்கள் வாழ்வுரிமை கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்!

திருத்தணி, அக் 6- பட்டியலின - பழங்குடி மக்கள் வாழ்வுரிமை கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம், திருத்தணியில் வியாழனன்று (அக்.5) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். திருத்தணி வட்டச் செயலாளர் வி.அந்தோணி வரவேற்றார்.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயல் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப. சுந்தரராசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். கோபால்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ் அரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. மோகனா, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. அப்சல் அகமது ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்.கே. பேட்டை வட்டச் செயலாளர் ஏ. சிவபிரசாத் நன்றி கூறினார்.