tamilnadu

img

தமிழகத்தின் முகத்தோற்றத்தை மாற்றிய போக்குவரத்துக் கழகங்கள்

தமிழகத்தில் நாட்டுடமை போக்குவரத்து நீண்ட வரலாறு கொண்டது. அரசு போக்கு வரத்துத் துறையின் கீழ் போக்குவரத்து பேருந்துகள் விடுதலைக்கு முன்பே இயக்கப்பட்டன. எனினும்  மாநிலத்தில் மொத்தத்தில் தனியார் பேருந்துகளே அதிகம் இருந்தன. விடுதலைக்குப் பிறகு  பொதுப்போக்குவரத்தை வலுவாக கட்ட மைக்க வேண்டிய தேவையை உணர்ந்து அதற்கான தனி சட்டம் ஒன்றிய அரசால் இயற்றப்பட்டு, ஒன்றிய அரசின் நிதியும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ கத்தில் சென்னை நகரமும், குமரி மாவட்ட மும், ஊட்டியும் நாட்டுடமையாக்கப்பட்ட பேருந்துகள் மட்டுமே இயங்க அனு மதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப் பட்டது. இதுதவிர மாநிலம் முழுவதும் இயங்கு கிற தொலைதூர விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு திமுகவின் ஆட்சி அமைந்தது. 1972 ஆம்  ஆண்டு அரசு போக்குவரத்து துறையின் கீழ்  இருந்த பேருந்துகளையும், நாட்டுடைமை யாக்கப்பட்ட தனியார் பேருந்துகளையும் இணைத்து ‘போக்குவரத்துக் கழகங்கள்’ என கம்பெனிகள் உருவாக்கப்பட்டன. தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியது சிறப்பானதொரு நடவடிக்கை. ஆனால் முந்தைய அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பல சலுகைகள் பறிக்கப்பட்டன. அதை எதிர்த்து சிஐடியு போராட்டங்களை நடத்தியது. கடுமை யான அடக்குமுறைகளையும், பழிவாங்கல்களையும் எதிர்கொண்டது. அது தனி வரலாறு.

வளர்ச்சியும் சேவையும்

போக்குவரத்துக் கழகங்கள் உரு வாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறை வடைந்து பொன்விழா காண்கின்றன. 1967 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 22,000  தொழிலாளர்கள் இருந்தனர். இது படிப் படியாக உயர்ந்து இப்போது 1,30,000  தொழிலாளர்களாக வளர்ச்சி கண்டுள் ளது. சுமார் 3000 பேருந்துகளாக இருந்தது.  இப்போது 22,000 பேருந்துகள் ஆகியிருக் கிறது. தமிழகத்தினுடைய 500 குடும்பங் களை கொண்ட கிராமங்களையும் போக்குவரத்து வசதிக்கு கொண்டு வருவது என்ற முறையில் பெரும் முன்னேற்றங் களை போக்குவரத்துக் கழ கங்கள் சாதித்தன.  கிராமங் களுக்கு இயக்கப்படுகிற நக ரப்பேருந்துகள் அனைத்தும் வருமானமற்ற வழித்தடங் களாகவே இப்போது இயங்கு கின்றன. இதர வழித்தடங்கள் ஈட்டிய வருமானம் இந்த நட்ட த்தை ஈடு கட்டிக்கொண்டு இருந்தது. போக்குவரத்துக் கழகங்கள் உருவான பிறகு 20 ஆண்டுகள் மிகவும் லாபகரமாக இயங்கின. பின்னர் படிப்படியாக வரவுக்கும்-செலவுக்கும் இடைவெளி விழுந்தது. வருமான மற்ற வழித்தடங்கள் இதற்கு முக்கிய மான காரணம். அரசு கொடுத்த மாணவர் களுக்கு இலவச பயணம், இப்போது அண்மையில் நகரப் பேருந்துகளில் பெண் களுக்கு இலவச பயணம் என்று அறி வித்தது போன்ற சமூக நலன் சார்ந்த நட வடிக்கைகள் இந்த வருமானத்திற்கும், செல விற்குமான இடைவெளிக்கு ஒரு காரணம். இந்த காலத்தில் டீசல் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு போக்குவரத்துக்கழகங்களை பெருமளவுக்கு பாதித்தது. கட்டண உயர்வு  என்பதை கண்மூடித்தனமாக செய்துவிட முடியாது. அண்ணா திமுக ஆட்சி மூன்றா ண்டுகளுக்கு முன்னால் கொண்டுவந்த கடும் கட்டண உயர்வு பயணிகள் எண்ணிக்கை யை பெருமளவுக்கு சரித்துவிட்டது. இதனால்  போக்குவரத்துக் கழகங்கள் மேலும் பலவீனப்பட்டன.

எதனால் அளவிட முடியும்?

தமிழகத்தில் கல்வியில் குறிப்பாக பெண் கல்வியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டதற்கு இலவச பேருந்து பயணம் முக்கியக் காரணமாகும். இதை வருமான இழப்பாகவும் லாப நட்ட காரணியாகவும் பார்த்துப் பேசுகின்றவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள். இந்த கல்வியின் முன்னேற்றத்தால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற அறிவுச்செல்வத்தை காசு பணத்தால் அளவிடவே முடியாது. இப்போது பெண்களுக்கான இலவசப் பயணம் வீட்டில் அடைந்து கிடந்த பெண்களை சமூகப் பங்களிப்பு செய்பவர்களாகவும், பொருளாதார நடவடிக்கை களில் ஈடுபடுகிறவர்களாகவும் மாற்றியிருக்கிறது. பெண்களின் பேருந்துப்பய ணம் 65 விழுக்காடு அதி கரித்திருக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கிற சமூகப் பொருளாதார மாற்றத்தை எந்த காசு பணத்தாலும் அளவிடமுடியாது. இதைப்போலவே தமிழக மின்சார வாரியம் விவசாயிகளுக்கு தந்து கொண்டி ருக்கிற இலவச மின் இணைப்புகள் தான் தமிழக விவசாயம் இன்றும் தொடர்வதற்கு காரணம். விவசாயம் கட்டுபடியாகாது என விவசாயிகள் கை மடங்கினால் ஏற்படும் விளைவுகள் பெரும் பட்டினிச் சாவுகளாக இருக்கும். இதை தடுத்துக் கொண்டிருக்கிற இலவச மின்சாரத்தை எந்த காசு பணத்தால் அளவிட முடியும்? தமிழகத்தில் சமூகப் பொருளாதார வாழ்க்கைக்கு நாட்டுடமை போக்கு வரத்தும், மின்சாரமும் ஆற்றியிருக்கிற பங்கு அளப்பரியது.  பொதுத்துறையில் இயங்குகிற போக்குவரத்துக் கழகங்களின் 50 ஆண்டு வரலாறு, அடிப்படை விஷயங் களில் பொதுவுடமையின் அவசியத்தை ஒவ்வொருவர் பொட்டிலும் அறைந்தது போல் சொல்லிக் கொண்டிருக்கிறது. போக் குவரத்துக் கழகங்களின் பொருளாதாரப் பற்றாக்குறையை அரசு ஈடுகட்டுவதன் மூலம் பொதுப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்து சிக்கனமான தாகவும், நம்பகமானதாகவும்,உரிய நேரத்தில் ஊர் சென்று சேர்ப்பதாகவும், வலுவாகவும் செயல்படுமானால் தனிப் பயன்பாட்டு வாகனங்கள் பெருமளவில் குறைந்துவிடும். அது பெட்ரோல், டீசலுக் கான அந்நியச் செலாவணியை மிச்சப் படுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவிற்கு குறைத்துவிடும். 

தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசை அகற்றுக!

ஆனால் ஒன்றிய அரசு லாபவெறி கொண்ட கார்ப்பரேட்டுகளுக்கு துணையாக பொதுத்துறை தொழில்களை தனியாருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கை தேச விரோத சமூக விரோத நட வடிக்கையாகும். விமானத்தளம், ரயில் நிலையம், தண்டவாளங்கள், நெடுஞ்சாலை கள், விளையாட்டு மைதானங்கள், பாது காப்பு தளவாடத் தொழில்கள், பெரும் கனரகத் தொழில்கள், சுரங்கங்கள், மின்  நிலையங்கள், போக்குவரத்து நிறுவனங் கள் போன்ற எல்லாவற்றையும் கொலை வெறியோடு தனியாருக்குத் தருகிற செய லில் ஈடுபடுகிற ஒன்றிய அரசை எப்பாடு பட்டும் தடுக்க வேண்டும். அப்படிப்பட்ட மத வெறி பாஜக அரசை போராடித் தூக்கி எறிய வேண்டும்.

தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை

தமிழகப் போக்குவரத்துக் கழகங்களின் அபாரமான வளர்ச்சியில் தொழிலாளர்கள் ஆற்றிய பங்கு பெரும் போற்றுதலுக்கு உரியது. வருமானத்தில் பள்ளம் விழுந்த போதெல்லாம் டீசலைக் கொடு, ஓடும் தூரத்தை அதிகப்படுத்து, ஓடத் தகுதியற்ற வண்டியை ஓட்டு, பழுதுபார்க்க உரிய  வசதி இல்லாமலே பழுதுகளை தீர்த்துவை  என்பது போன்ற நிர்வாகத்தின் நியாய மற்ற பல நடவடிக்கைகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு தொழிலாளர்கள் நிறை வேற்றிய பாங்கு வியக்கத்தக்கதாகும். போக்குவரத்துக் கழகங்கள் தொழி லாளர்களுக்கு உரிய பலன்கள் பல வற்றை நிறுத்தி வைத்தும், குறைத்து சுருக்கியும் கொடுமைகள் இழைக்கின்றன. அவர்களுடைய சேமிப்புகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய்களை நிர்வாகங் கள் எடுத்து செலவழித்து உள்ளன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆண்டுக்கணக்கில் கிடைக்காமல் மூத்த தோழர்கள் படுகிறபாடு சொல்லி மாளாத பெருங்கொடுமை. போக்குவரத்துக் கழகங்களின் தொடர் இயக்கத்தில் போக்குவரத்து தொழி லாளர்களின் பெரும் தியாகம் ஈடு இணை யற்றது. அரசாலும் மறுக்கமுடியாத இந்த உழைப்பாளர்களுக்கு அரசு உரிய நியாயங்களை வழங்க வேண்டும்.

 கட்டுரையாளர்: சிஐடியு, மாநிலத் தலைவர்