சென்னை, நவ. 24 - போக்குவரத்துக் கழகத்திற்கு வர வுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை யை தொடங்க வேண்டும், ஓய்வூதி யர்களுக்கு 2015ம் ஆண்டு முதல் உயர்த்தப்படாமல் உள்ள அகவிலை ப்படி, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வு பெறும்போதே ஓய்வுக் கால பணப்பலன்களை வழங்க வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணி யில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வெள்ளியன்று (நவ.24) பல்ல வன் இல்லம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களில் செயல் படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகி கே. ஆறுமுகநயினார், “அரசு போக்கு வரத்துக் கழகங்களில் செயல்படும் 8 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 8 ஓய்வுபெற்றோர் சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம். போக்குவரத்து சேவைத் துறை என்பதால், அரசு பணம் கொடுக்க மறுக்கிறது. இத னால் பணியில் உள்ள தொழிலா ளர்கள், ஓய்வூதியர்கள் வஞ்சிக்கப்படு கின்றனர். போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும்” என்றார். “90ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் அகவிலைப் படி உயர்வு வழங்காமல் 8 ஆண்டு களாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். ஓய்வூதியர்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 70 வயதை கடந்த வர்கள். எனவே அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும். 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த வர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடை பெறுகிறது” என்றும் அவர் கூறினார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம் தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் கூட்ட மைப்பில் உள்ள 16 சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.
தொடர் இயக்கம்
இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டத்தில், கோரிக்கை களை வலியுறுத்தி டிச.4-5 தேதி களில் அனைத்து பணிமனைகளிலும் பிரச்சாரம் செய்வது, டிச.19 அன்று வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.