tamilnadu

டாஸ்மாக் பார் டெண்டரில் வெளிப்படைத் தன்மை: அமைச்சர்

சென்னை, ஜன.3- டாஸ்மாக் பார்கள் டெண்டர் தொடர்பாக விதிமீறல்கள் நடந் துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள் திங்களன்று (ஜன.2) அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, செய்தியாளர் களை சந்தித்த செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தது வருமாறு:- டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார்களை டெண்டர் விட்டதில் முறை கேடுகள் நடந்து இருப்பதாக கூறி எனது  வீட்டு முன்பு திரண்டனர். அவர்க ளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி னேன். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை அவர்கள் தெரிவித்தனர். அதற்கு நான் விளக்கம் அளித்தேன். டாஸ்மாக் பார் டெண்டர்கள் ஒளிவு  மறைவின்றி வெளிப்படை தன்மை யுடன் நடைபெற்றுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 68 விதிகளுடன் டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார் கட்டிடத்தின் சான்று எங்களிடம் உள்ளது என கூறி அதனை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. இடையில் விடுமுறை நாட்கள் வந்ததால் டெண்டர்களை பிரித்து பார்க்க முடியவில்லை. இன்று அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த முறைகேடும் இன்றி பார்கள் ஏலம் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.