tamilnadu

img

திருநங்கை கங்கா அமோக வெற்றி!

வேலூர்,பிப்.22- வேலூர் மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். 2008ஆம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப் பட்ட ஏப்ரல் 15ஆம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் ‘திரு நங்கைகள் தினமாக’ கொண்டாடப் படுகிறது.  இப்படி, திருநங்கைக ளுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத் தியது திமுக ஆட்சி. இந்நிலையில் முன்ன தாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தேர்தலில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டில், திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட திருநங்கை ரியா, 950 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற  புகழைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தற்போது வேலூர் மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, திமுக  சார்பில் திருநங்கை கங்கா  வேட்பாளராக அறிவிக்கப் பட்டு, தீவிர வாக்குச் சாவடி யில் ஈடுபட்டார். இந்நிலை யில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பா ளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். திருநங்கை கங்கா, வேலூர் மாவட்டம் பழைய நரகப் பகுதியில் வசித்து வருகிறார். தென்னிந் திய திருநங்கைகள் கூட்ட மைப்பின் செயலாளராக இருந்து திருநங்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வு கண்டுள்ளார். சமூக  அக்கறை உள்ள திருநங்கை கங்காவை அப்பகுதியில் அறியாத நபர்களே இருக்க முடியாது என அப்பகுதியச் சேர்ந்த மக்கள் தெரிவித்த நிலையில், மக்கள் சேவை யில், கவுன்சிலர் கங்காவாக இனி வலம் வருவார் என மக்கள் கூறுகின்றனர்.