tamilnadu

உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

பெண் தற்கொலை சம்பவம்

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது  செய்யப்பட்டதால், காவல் நிலையம்  முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவை யாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு  மகன் அய்யா தினேஷ் (32). பொது  இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய தாகக் கூறி, இவரை நடுக்காவேரி காவல்  நிலையத்தினர் ஏப்.8 அன்று கைது செய்தனர்.  பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தாகக் கூறி அய்யா தினேஷின் தங்கை களான மேனகா (31), கீர்த்திகா (29)  காவல் நிலையம் முன்பு களைக் கொல்லி மருந்தைக் குடித்தனர். இதை யடுத்து, இருவரும் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா ஏப். 9 அன்று உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக நடுக்கா வேரி காவல் நிலையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்.11 அன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால், கீர்த்திகா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்க வேண்டும். அய்யா தினேஷ்  மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். ஆய்வாளர் சர்மிளா உள்பட  4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்தி காவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரசமரத் தெருவில் தொ டர்ந்து 7 ஆவது நாளாக புதன்கிழமை யும் உறவினர்கள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில், நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வி.அறிவழகனை வல்லம் காவல் நிலையத்துக்கும், கலியபெருமாளை வாட்டாத்திக்கோட்டை காவல் நிலை யத்துக்கும், தலைமைக் காவலர் மணி மேகலையை திருவோணம் காவல்  நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்டக் காவல் அலுவலகம்  செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித் தது.