“இஸ்ரேலே ஆக்கிரமிப்பு போரை நிறுத்து; பாலஸ்தீனம் பாலஸ்தீனியருக்கே’’என வலியுறுத்தி சென்னையில் வெள்ளியன்று (நவ.3) தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.