உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியல் 3ஆவது முறையாக இடம் பெற்ற த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்
மயிலாடுதுறை, செப். 26- மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள த.பே.மா.லு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில்தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளி யிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள முதல் 2% ஆராய்ச்சியாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள் ளன. அப்பட்டியலில் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் முனைவர். ஜோதிபாஸ், பல்வேறு விதமான நியூ ஏஜ் நானோ மெட்டீரியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சமூகத்திற்கும் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் சாயப்பட்ட றை கழிவுகளை சிதைக்கும், சூரிய ஒளியின் மூலம் செயல்படும் போட்டோ கேட்டலிசிஸ், இரு பரிமாணங்களை உள்ளடக்கிய கிராபைட் மற்றும் டைட்டானியம் கார்பைடு போன்ற அதிக திறன் வாய்ந்த நானோ (Nano) கலவை பொருட்களின் மூலம் சக்தி சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அது மட்டுமல்லாமல் பச்சைய முறை மூலம் தயாரிக்கப்படும் நானோ வடிவிலான துகள்கள் மூலம் மருத்துவம் சம்பந்தப்பட்ட நீரழிவு எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு போன்ற மக்கள் நலத்தை உள்ளடக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர், இந்த சமூகத்திற்கும் மனித வாழ்வுக்கும் மிகப் பயன் தரக்கூடிய இவ்வாராய்ச்சி வெளியீடுகளை பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். சாதனை படைத்த பேராசிரியருக்கு கல்லூரி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், சக பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
