மதுரை, டிச.22- மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு காவலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் திருநெல்வேலியில் 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாப்டர் பள்ளியின் கழிவறை இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகட்டடங்களை ஆய்வு செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல்நிலை யத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் (44) , கண்ணன் ஆகிய இருவரும் செவ்வா ய்க்கிழமை இரவு நேர ரோந்துப் பணியில் இருந்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பாக நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. அதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிக மாக இருந்த நிலையில், கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர்கள் அதே பகுதியில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடிரென இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவல ரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இறந்த சரவணன் மதுரை கிரைம்பிராஞ்ச் காவலர் குடியிருப்பில் வசித்தவர். இவருக்கு ஆனந்தி (37) என்ற மனைவியும் காயத்ரிதேவி என்ற 15 வயது மகளும், சுகினாதேவி என்ற 13 வயது மகளும் உள்ளனர்.
மற்றொரு காவலரான கண்ணன் கை, தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும் காயமடைந்த கண்ணன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்,டிஜிபி அஞ்சலி தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ.மூர்த்தி, போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தென்மண்டல ஐஜி அன்பு ஆகியோர் தலைமைக்காவலர் சரவணன் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.