கால நிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மரக் கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த மரக் கன்று நடும் நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜெகதீசன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வக் குமார் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.