tamilnadu

img

மக்களுடைய மனநிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படுவது அரசியல் இயக்கத்திற்கு ஆபத்தானது

திருச்சிராப்பள்ளி, மே 1- டாக்டர் அப்துல்கலாம் விருது பெற்ற வாழ்நாள் சாதனையாளர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரு மான டி.கே.ரங்கராஜனுக்கு பாராட்டு விழா  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புற நகர் மாவட்டக்குழு சார்பில் ஞாயிறு அன்று  திருச்சி நம்பர் 1 டோல்கேட் ஸ்ரீநிவாசா மஹா லில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் புறநகர் மாவட்டச்  செயலாளர் எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். பெல் சிஐடியு பொதுச்செயலாளர் பி.பரமசிவம் வரவேற்றார். மூத்த தோழர்கள்  கே.முகமதலி, கே.வி.எஸ்.இந்துராஜ், கே.சி. பாண்டியன், எஸ்.லூர்துசாமி, ஆர்.சுப்ரமணி யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அப்துல்கலாம் விருது பெற்ற  வாழ்நாள் சாதனையாளர் டி.கே.ரங்க ராஜனை பாராட்டி, உலக தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர் என்.நல்லுசாமி பேசுகை யில், ‘‘நாடாளுமன்ற பணியின் மூலம் இயக்  கத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பணியை செய்தவர். மிகவும் எளி மையானவர். இவரது சேவை நாட்டிற்கு தேவை. இந்த விழாவை தமிழை போற்றும் விழாவாக நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். 

இந்திய தேசிய காங்கிரஸ் இ.வேலுச்சாமி  பேசுகையில், ‘‘இந்த பணியில் யாரை அமர வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மா னித்து டி.கே.ரங்கராஜனை அந்த இடத்  தில் அமரவைத்து விருது பெற செய்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யை பாராட்டுகின்றேன். தேர்தலில் தோற்றா லும், ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஒரே மாதிரியாக இயல்பாக இருக்கக் கூடியவர்’’ என்றார். சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், ‘‘தனது  பணியை மிகச்சிறப்பாக ஆற்றியவர். தொழிற்சங்க பணியை அவரிடம் நாம்  கற்றுக்கொள்ள வேண்டும். தனது நாடாளு மன்ற உறுப்பினர் நிதியை தமிழகம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கும். சுகாதாரத் திற்காகவும் ஒதுக்கியவர். கல்விக்கு செய் யும் சேவை சமுதாயத்திற்கு செய்யும் பணி  என கருதியவர். இந்த விருது அவருடைய  நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம்’’ என்றார்.   மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்.எல்.ஏ பேசுகையில், ‘‘கீழடி நாக ரீகத்தை மேலே உள்ளவர்கள் மறைக்க  முயற்சித்த போது அதை யாராலும் மறைக்க  முடியாது என்று நாடாளுமன்றத்தில் குரல்  கொடுத்தவர். இலங்கை மக்களுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இவர் விருது பெற்று  கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெருமை சேர்த்த வர்’’ என்றார். 

சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் பேசுகையில், ‘‘சிம்கோ போராட்டக்கள நாயகனாக இருந்தவர் டி.கே. ரங்கராஜன். முதல்வரே போராட்டக் களத்தில் நின்று பேசிய போராட்டம் சிம்கோ  போராட்டம். இந்த போராட்டம் இந்தியா முழு வதும் பேசப்பட்டது. நாடாளுமன்றத்தில் இவர் பேசிய முதல் பேச்சே தொழிலாளர் களின் நலன் குறித்தது என்பது குறிப்பிடத் தக்கது’’ என்றார்.  சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா பேசுகையில். ‘‘இந்திய நாடு பல்வேறு  சவால்களை சந்தித்த காலத்தில் உழைப்  பாளி மக்களின் குரலாக ஓங்கி உரைத்தவர்’’ என்றார். சிபிஐ மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பி னர் எம்.செல்வராஜ் பேசுகையில், ‘‘தொழிற்  சங்க பிரச்சனைகளுக்கு தனது போராட்டத்  தால் தீர்வு கண்டவர். இவர் தனது போராட்ட அனுபவங்களை புத்தகமாக வெளியிட  வேண்டும். அது ஒரு சிறந்த வரலாறாக அமை யும்’’ என்றார்.  ஏஐடியுசி மாநில தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன் பேசுகையில், ‘‘தனது வாழ்  நாள் முழுவதும் எதைப்பற்றியும் சிந்திக்கா மல் மக்களுக்காக வாழ்ந்தவர்’’ என்றார்.  மதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர்  டி.டி.சி.சேரன் பேசுகையில், ‘‘அரசிய லுக்கும், பொதுவாழ்விற்கும் இலக்கண மாக இருக்கக் கூடியவர். இவரது வாழ்வு  வருங்கால இளைஞர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பாடமாக அமையும்’’ என்றார். 

விசிக நாடாளுமன்ற தொகுதி செயலா ளர் அ.க.தமிழாதன் பேசுகையில், ‘‘ஏறத்தாழ  60 ஆண்டுகளுக்கு மேலாக தனது உழைப்பை  உழைக்கும் மக்களுக்கும், இந்திய தேசத் திற்கும் அர்ப்பணித்தவர்’’ என்றார்.  மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தனது ஏற்புரையில் பேசியதாவது:  கிடைத்துள்ள விருது உங்களால் கிடைத்தது என்பதை சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன். என்னை அனை வருக்கும் அறிமுகப்படுத்தியது கட்சி தான்.  அந்த காலக்கட்டத்தில் சைக்களிலில் சென்று  கட்சி பணியாற்றுவோம். இளையராஜா, கங்கைஅமரன் ஆகியோருக்கு அஸ்தி வாரம் அமைத்து கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி தான். பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுட்டுக்கொல்லப்பட்டு கம்யூ னிஸ்ட் கட்சியை அடியோடு முடக்கி உள்ள னர். மனிதர்கள் சாவார்கள், தத்துவம் சாகவே  சாகாது. இந்த தத்துவத்தை காலத்திற்கு தகுந்தாற்போல் பொருத்த வேண்டிய கடமை  நமக்கு உள்ளது. மக்களுடைய மனநிலை யை புரிந்து கொள்ளாமல் செயல்படுவது என்பது  அரசியல் இயக்கத்திற்கு ஆபத்தா னது. பல அணுகுமுறையை  கற்றுக்கொள்ள தொழிலாளி வர்க்கம் தான் உதவியது. இந்த  மாவட்ட குடும்பங்களோடு உள்ள உறவு  அவர்கள் காட்டிய அன்பு இல்லையென்றால் நான் இல்லை. எனவே அவர்களை பாராட்டு வதற்காக, உங்களை பாராட்டுவதற்காக வந்துள்ளேன். இந்த பாராட்டு புதுக்கோட்டை  உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். போராட்டங்களும், இயக்  கங்களும் தான் தலைவர்களை உரு வாக்கும். எனவே அப்படிப்பட்ட இயக்கங் களை மேலும் நடத்த வேண்டும் என்றார்.   முன்னதாக மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நம்பர் 1 டோல்கேட் ரவுண்  டானா பகுதியில் மே தின கல்வெட்டை திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பாராட்டு  விழா நடைபெறும் அரங்கை வந்தடைந்த னர்.  சிபிஎம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றி யச் செயலாளர் ஏ.கனகராஜ் நன்றி கூறினார்.