செனனை,ஜன.19- தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ள தால் மார்ச் மாதத்திலோ அல்லது மார்ச்மாத இறுதியிலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அமர்வு 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.