tamilnadu

ஓராண்டாகியும் முழு பயன்பாட்டிற்கு வராத திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை

ஓராண்டாகியும் முழு பயன்பாட்டிற்கு வராத  திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை

திருப்பூர் மாவட்டத்தில் 100 படுக்கை  வசதிகளுடன் கடந்த ஆண்டு திறக்கப் பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும்  முழு பயன்பாட்டுக்கு வரவில்லை. திருப்பூர் சர்வதேச அளவில் பின்ன லாடை உற்பத்தியில் பெயர் பெற்ற நக ரம். உள்நாட்டு சந்தை, வெளிநாட்டு ஏற்றுமதி என ஆண்டுக்கு ரூ.50 ஆயி ரம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டித்த ருகிறது. இங்கு பீகார், ஒடிசா,  உத்தர  பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தமிழ் நாடு தொழிலாளர்கள் என 8 லட்சத்திற் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூ ரில் தங்கி பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வரு கின்றனர். எனவே திருப்பூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் பல  ஆண்டு காலமாகக் கோரிக்கை வைத்து  வந்தனர். இதையடுத்து சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பு ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அரசு இங்கு இஎஸ்ஐ மருத் துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதன் பிறகு இடம் தேர்வு, வழக்கு என  10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம னை கட்டும் பணிகள் தொடங்கப்படா மல் இருந்தது.  தொடர்ச்சியான வலியுறுத்தல் கார ணமாக, 2019 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர்  மோடி, பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் 7.5  ஏக்கர் பரப்பளவில் 82 கோடி மதிப்பீட் டில் தரைதளத்தளம் உள்ளிட்ட மூன்று  தளங்களுடன் கூடிய இஎஸ்ஐ மருத்து வமனை கட்ட அடிக்கல் நாட்டினார். பின்பு ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகள் ஒரு வழியாக 2023 ஆம்  ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், தீவிர சிகிச்சை பெறுவதற்கான உபக ரணங்கள் கொண்டு வரப்படாமல் இருந் தது. இருப்பினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவசரகதியில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இம் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அதிகமான இ.எஸ்.ஐ பயனாளிகளை கொண்ட மாவட்டம்:

திருப்பூரில் சுமார் 4.5 லட்சம் இ.எஸ்.ஐ பயனாளிகள் உள்ளனர். இங்கு நூறு படுக்கைகளுடன், 32 பணி யாளர் குடியிருப்புகள், மகப்பேறு சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளு டன் இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப் பட்டு ஓர் ஆண்டு நிறைவு செய்துள்ள  நிலையில், இன்னும் இம்மருத்துவ மனை முழுவதும் பயன்பாட்டிற்கு வரா மல் உள்ளது.  

மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை:

இஎஸ்ஐ மருத்துவமனையில் தேவையான சிறப்பு மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.  மருத்துவமனைக்கு வரும் சாலையை  சீரமைக்க வேண்டும். உரிய நடவ டிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் வலி யுறுத்தக் கோரி திருப்பூர் இஎஸ்ஐ  மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பிப்.21 ஆம் தேதி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  இதுகுறித்து தொழிலாளர்கள் சிலர்  கூறுகையில், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்ல போது மான போக்குவரத்து வசதி இல்லை. பூலுவப்பட்டி பகுதியில் இருந்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்ல பேருந்துகள் இல்லாமல், ஆட்டோவில் ரூ.100 முதல் 150 வரை கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பல  சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள  சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பரிந்து ரைக்கின்றனர். அந்த இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு 3 மாவட்டங்களில் இருந்து  பயனாளிகள் சிகிச்சை பெற வருதால்  கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு குறிப் பிட்ட நேரத்திற்கு சென்று வர முடிய வில்லை. திருப்பூரில் 100 படுக்கைகளு டன் இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப் பட்டும், போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாமல் தீவிர சிகிச்சைக்கு கோவைக்கு செல்ல  வேண்டி நிலை தொடர்வது வேதனை யாக உள்ளது என்றனர்.