tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் முயற்சியால் இலவச வீட்டுமனை பட்டா

ங்கொடி இயக்கத்தின் முயற்சியால் இலவச வீட்டுமனை பட்டா

திருவண்ணாமலை, பிப்.20-  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகரில் சிறுபான்மை மக்கள் வாடகை வீட்டிலும், கூட்டுக் குடும்பமாகவும், புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தனர்.  அந்த மக்கள் நிரந்தரமாக குடியிருப்பதற்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தின் விளை வாக, செய்யாறு வட்டாட்சியர் அலு வலகத்தில்  முதல் தவணையாக 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.  பட்டாவை பெற்றுக் கொண்ட சிறுபான்மை மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்திற்கு வந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வனுக்கு சால்வை அணிவித்து, செங்கொடி இயக்கத்திற்கு  நன்றி தெரிவித்தனர்.  இந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்டத்  தலைவர் யாசர் அராபத், மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் ஷேக் இஸ்மாயில் ஷரீப், சிபிஎம் வட்டார செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.