மயிலாடுதுறை, நவ.12 - தொடர் கனமழையால் மயிலாடு துறை மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் குடிசை களை சூழ்ந்த மழைநீரால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள னர். சுமார் 65 ஆயிரம் ஏக்கருக்கும் மேற் பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிற இயற்கை பேரிடர்களால் காவிரியின் கடைக்கோடியாக உள்ள மயிலாடு துறை மாவட்டம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட் டம் முழுவதும் கனமழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் ஒருபுறம் மூழ்கி அழுகி வரும் நிலையில், குடியிருப்புகள் இடிந் தும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பல பகுதிகள் பாதிக்கப்பட்டும் மாவட் டம் முழுவதும் மக்கள் பெரும் அவதி யடைந்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 25 செ.மீ மழை பெய்துள்ளது. சீர்காழியில் 43 செ.மீ, கொள்ளிடத்தில் 31 செ.மீ என கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரே இரவில் பெய்த கன மழை மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தரங்கம்பாடி வட்டத்தில் தலைச் சங்காடு, பூந்தாழை, அப்பராசப் புத்தூர், கீழையூர், மேலையூர், மேலப் பாதி, கீழப்பாதி, நடுக்கரை, ஆக்கூர், மாமாக்குடி, காலமநல்லூர், டி. மணல்மேடு, திருக்கடையூர், சீதை சிந்தாமணி, திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிராமங்களும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சம்பா பயிர்களெல்லாம் மூழ்கி அழுகி வருகின்றன. தலைச்சங்காடு, மணல்வெளித்தெருவில் உள்ள 35 ஆண்டுகள் பழமையான தொகுப்பு வீடு களில் நீர்புகுந்து மக்கள் வசிக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகள் சேதமடைந்துள்ளது குறித்து கூறி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஒன் றிய ஆணையர் என அனைத்து அதிகாரி களிடமும் பலமுறை நேரிலும், மனுக் கள் மூலமாகவும் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங் களில் சொல்லொண்ணா துயரத்தை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். வீடுகளுக்குள் தேங்கியுள்ள மழைநீரை பாத்திரங்களை வைத்து அள்ளி ஊற்றுகின்றனர். அரிசி உள் ளிட்ட உணவுப்பொருட்கள் மழையால் நனைந்து விட்டதாகவும், நனைந்த அரி சியை உலறவைத்து சமைக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் தலைச்சங்காடு வழியாக பிற பகுதிகளுக்கு செல்கிறார்.
ஆனால் பட்டியல் வகுப்பு மக்கள் வசிக் கும் மணல்வெளித்தெரு பகுதிக்கு மட்டும் வரவில்லை என குற்றம் சாட்டு கின்றனர். சீர்காழி முதல் நாகை வரை அமைக் கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலைக் காக தலைச்சங்காடு, பூந்தாழை, ஆக் கூர் பகுதிகளின் வடிகால் வாய்க்கால் களை சாலை அமைக்கும் கட்டுமான நிறுவனம் ஆக்கிரமித்து அடைத்துவிட் டது. இதனால்தான் வாய்க்கால்களில் நீர் வடிய வழியின்றி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் குடியி ருப்புகளை சூழ்ந்தும், சாலைகளில் வழிந்தோடுகிறது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வரு வாய்த் துறையினர் எப்படியாவது நான்கு வழிச்சாலையை அமைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில், அப் பாவி விவசாயிகளையும், குடியிருப்பு வாசிகளையும் அகற்றுவதிலேயே குறிக்கோளாக இருந்து தற்போது பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி இருப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் அப்பராசப்புத்தூர் கால னித்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு பகு திகளில் 6 குடிசை வீடுகள் கனமழை யால் இடிந்து விழுந்துள்ளதை, ஒன்றி யச் செயலாளர் மார்க்ஸ் மற்றும் ஒன்றிய -கிளை உறுப்பினர்கள், விவசாயிகள், வாலிபர் சங்கத்தினர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். திருக்கடையூர், சீதைசிந்தாமணி, டி.மணல்மேடு பகுதிகளில் கனமழை யால் இடிந்த வீடுகளையும், நீரில் மூழ் கிய விளைநிலங்களையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், திருக்கடையூர் சிபிஎம் கிளை செயலாளர் இளைய ராஜா, சிபிஎம் முன்னாள் ஒன்றிய செய லாளர் என்.செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் பாதிப்பு
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றில் 6 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால் கொள்ளிடம் பகுதி களில் சாகுபடி செய்திருந்த சம்பா நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி யுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில், மற்ற மாவட் டங்களைவிட அதிகளவில் மழை பதி வாகி வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விளை நிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக் கின்றன. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அழிந்தது போக, எஞ்சியிருந்த நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. பாதிக் கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் உள் ளிட்டோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறினர். மயிலாடு துறை, குத்தாலம், மணல்மேடு பகுதி களிலும் கனமழையால் பாதிப்பு ஏற் பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக் கும், மக்களுக்கு உரிய நிவாரண உதவி களை வழங்குவதோடு, மழைவெள்ளத் தால் பாதிப்படைந்த பகுதிகளில் முகாம் களை அமைத்து மக்களுக்கு தேவை யான உணவுப் பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை முறையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகளையும் துரி தப்படுத்த வேண்டும். மழை தொடர்ந்து பெய்ய உள்ளதால் மழைநீர் வடிய தடை யாக உள்ள ஆக்கிரமிப்புகளை அப்பு றப்படுத்த வேண்டும். பாசன மற்றும் வடிகால் ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள உடைப் புகளை அடைப்பதோடு, வலுவிழந் துள்ள கரைகளை பலப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
கனமழையால் சேதமடைந்த மயி லாடுதுறை, செம்பனார்கோவில், சீர் காழி, பூம்புகார் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் னர், சாலைகள் மற்றும் குடிசை வீடு களில் தேங்கி நிற்கும் மழைநீரை பம்பு செட்டு மூலம் வெளியேற்றவும், சாலை களில் கிடக்கும் மரங்களை அகற்றவும் மின்கம்பங்களை சீரமைக்கவும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கவும் அறி வுறுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை கணக்கெடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைக்கவும், முகாம் களில் உள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் குடிசை வீடுகளில் உள்ள மக்க ளின் அன்றாட செலவுக்காக நிதியுதவி வழங்கினார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா, எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த தொடர் மழையின் காரண மாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், சனிக கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கரையில் அதிகபட்சமாக 10.3 செ.மீ. மழை பதிவானது. பூதலூர் 9.4, மஞ்சளாறு 9.0, அய்யம்பேட்டை 8.3, தஞ்சாவூர் 8.1, திருக்காட்டுப்பள்ளி 7.4, திருவிடைமருதூர் 6.3 என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே புன வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்டு 15 நாட்களான வயல்க ளில் மழைத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மழை தொடரும் பட்சத்தில் பயிர்கள் அழுகக்கூடிய நிலை உள்ள தாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதில், புனல்வாசல் கிராமத்தில் வடிகால் வாய்க்காலை முறையாக தூர் வாராத நிலையில், அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தப் பயனும் இல்லை. இரண்டு நாள் பெய்த மழை யினால் தேங்கிய நீரை வடிய வைப்ப தற்காக விவசாயிகளே ஒன்று சேர்ந்து, தங்கள் சொந்த செலவில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்க வடிகாலை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.
படகுகள்
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டி னம், கள்ளிவயல் தோட்டம், கொள் ளக்காடு, புதுப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிப் பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன் மாதேவிப்பட்டினம், கணே சபுரம் உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், காற்ற ழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 தினங்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் அனைத் தும் அந்தந்த துறைமுகங்களில் பாது காப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.