tamilnadu

img

விவசாயிகள் பேரணிக்கு சென்றவர்களை கைது செய்த திருமங்கலம் காவல்துறை....

மதுரை:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் திருத்த சட்டத்தை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில்தஞ்சாவூரில் செவ்வாயன்று பிரம்மாண்ட மான பேரணி நடைபெற்றது. 

பேரணிக்கு மதுரை திருமங்கலம் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களை திருமங்கலம் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேரணிக்குச் செல்ல அனுமதி மறுத்ததோடு 40 பேரை கைது செய்வதாகவும் கூறினர்.இதையடுத்து பாஜக அரசுக்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், ஜி.சந்தானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஜி.முத்துராமன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.