நகாவன், (அசாம்) ஜூலை 10- அசாமில் கடவுள் சிவன் போல் வேடமணிந்து பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக தெரு வில் நாடகம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய் துள்ளனர். சனிக்கிழமை மாலை நகாவ நக ரின் காலேஜ் சவுக் பகுதியில் சில இளைஞர்கள் நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், எரி பொருள், உணவுப் பொருட்கள் மற் றும் பிற அத்தியாவசிய பொருட்க ளின் விலை உயர்வுக்கு எதிராக நாடகம் போட்டு நடித்தனர். அதன்பின்னர், கடவுள் சிவன் வேடமணிந்த நபர் பிரதமர் மோடி யை தாக்கிப் பேசினார். “முதலாளி களின் விருப்பத்தை மட்டுமே அரசு நிறைவேற்றுகிறது. அவர்களுக்கா கவே செயல்படுகிறது. பொது மக்க ளின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்வதில்லை” என அவர் கூறி யுள்ளார். தொடர்ந்து பார்வையா ளர்களாக இருந்தவர்களிடம், அதிக ரித்து வரும் பணவீக்கத்திற்கு எதி ராக நீங்களும் தெருக்களில் இறங்கி போராடுங்கள் என அவர்கள் கூறி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும், படா பஜார் பகுதிக்கும் சென்று இதேபோன்ற நாடகம் ஒன்றை நடத்தி உள்ளனர். இது நகாவன் மாவட்டத்தின் பஜ்ரங் தள அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்து நகாவன் சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நடிகர்களான பிரிஞ்சி போரா மற்றும் கரீஷ்மா ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.