tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 1,042 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி, ஜன. 30 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக இதுவரை 1042 பேரிடம் விசார ணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையத்தின் 36-வது அமர்வுடன் விசார ணை முடிவுக்கு வரும் என ஆணைய வழக்க றிஞர் அருள்வடிவேல் சேகர் கூறினார். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் 35-வது கட்ட விசார ணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர்  மாளிகையில் உள்ள முகாம் அலுவல கத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.  இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சரத்கர், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 5 பேர் ஆஜ ராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலை யில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட  விசாரணை கடந்த சனிக்கிழமை  நிறை வடைந்தது.

இதைத்தொடர்ந்து ஆணைய வழக்கறி ஞர் அருள்வடிவேல் சேகர் ,நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  35வது அமர்வு விசாரணையில் ஆஜரா வதற்காக 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட தில் 5 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். முன்னாள் தலை மை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆணை யத்தின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜ ராவதாக தகவல் தெரிவித்து உள்ளார். இதை ஏற்று அவர் ஒருநபர் ஆணையத்தின் 36-வது கட்ட விசாரணைக்கு அழைக்கப் படுவார். ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும்.  இந்த விசாரணைக்கு கிரிஜா வைத்திய நாதன், அப்போதைய டி.ஜி.பி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படும். ஒருநபர் ஆணை யத்தின் 36-வது அமர்வுடன் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.  விசாரணை நிறைவு பெற்றாலும் ஆணையத்தின் முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தொகுக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,042 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.