tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை நிறைவு

தூத்துக்குடி, பிப்.18- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆணையம் தனது சாட்சிகள் விசாரணை பிப்ரவரி 18 வெள்ளியன்று நிறைவடைந்தது. இன்னும் மூன்று மாத காலத்தில் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆணைய வழக்குரைஞர் அருள் வடிவேல்  சேகர் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு  மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு  நபர் விசாரணை ஆணையம் 9-8-18 அன்று விசாரணையைத் துவக்கியது.  இதுவரை  36 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பப் பட்டு 1048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜ ராகி விளக்கம் அளித்தனர். 1544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. இந்த விசார ணையின் அறிக்கை இன்னும் மூன்று மாத காலத்துக்குள் தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்படும் என ஆணைய வழக்கு ரைஞர் அருள் வடிவேல் சேகர்தெரிவித்தார்.