tamilnadu

img

இது யாருக்கான டிஜிட்டல் யுகம் - ஃபர்ஸானா நிசார், ஹுமைரா நபி காஷ்மீர் பத்திரிகையாளர்கள்

பதினைந்து வயதான மன்சூர் அலி, ஒரு பனி மூட்டமான பிப்ரவரி  மாதத்தில் ஒரு நாள் காலையில் கோகர்நாக் செல்லும் வழியில் கணுக்கால் அளவிற்கு ஆழமாக தேங்கியிருந்த பனிக்கட்டிகளை கடந்து வேக வேகமாக நடந்தார். சாதாரண காலமாக இருந்தால், அவர் பள்ளிக்குச் சென்றிருப்பார். ஆனால் 2020-ஆண்டு மார்ச்  முதல் மன்சூர் ஒரு மெக்கானிக்கிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார், கொரோனா தொற்றுக் காலத்தில் காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் அவர் வேலைக்குச் சென்றுள்ளார். அவரிடம் பேசியபோது, “எனது தந்தை ஒரு கட்டுமானத் தொழிலாளி கொரோனா நெருக்கடியின் போது எங்களது ஆறு பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான  வருமானம் இல்லை. அந்த சமயத்தில் பள்ளி மூடப்பட்டி ருந்ததால் எனது தந்தையின் சுமையில் சிறிய அளவை நான்  ஏற்றுக்கொண்டேன்”  என்றார். கொரோனா தொற்றுப் பரவலின் போது பெரும்பாலும் குழந்தைகள் ஆன்லைன் கற்றலுக்கு மாறினர். ஆனால், காஷ்மீரின் குஜ்ஜார்-பகர்வால் சமூகத்தின் பின்தங்கிய குழந்தைகளுக்கு, ஆன்லைன் கல்வி கனவாகவே இருந்தது. ஸ்மார்ட்போன்கள், இணையம்  இரண்டையும் அணுக முடியவில்லை. இதனால் பல பழங்குடி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். குழந்தைகள் தினம்தோறும் சம்பாதித்த ஊதியம்  குடும்பங்களுக்கு உதவியாகஇருந்தது.

கோகர்நாக்கில் உள்ள பிராரி கிராமத்தைச் சேர்ந்தவர்  நலா சுந்த். அவர் உள்ளூர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தார், அவரது குடும்பத்தால் ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை, அப்படியே வாங்கியிருந்தாலும் கூட  கிராமத்தில் இணைய இணைப்பு மோசமாக இருந்துள்ளது. கொரோனா ஊரடங்கின்போது உயிர்வாழ்வதே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. வறுமை என்னை விரட்டியது. நான் ஒரு ஏழை. எனக்குத் தேவை  கல்வியா? நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவா? சொல் லுங்கள் எனக்கூறிக்கொண்டு கைகளில் ஒட்டியிருந்த கிரீஸைத் துடைத்துக்கொண்டே கேட்டார் நலாசுந்த். 13 வயது நிரம்பியவர் முனாசா (பெண்). அவர்  கூறுகையில், “எனது தந்தை அப்துல் மஜித் வாழ்வாதா ரத்தை இழந்த சூழலில் எனது கல்வி கேள்விக்குறியானது.  நாங்கள் மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பாலில் பால் பொருட்களையும், சோள ரொட்டிகளையும் விற்று வந்தோம், கொரோனா தொற்றுப் பரவல் எங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. எனது தந்தை என்னையும் சேர்த்து மூன்று பிள்ளைகளையும் எப்படியாவது ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக போராடினார், ஆனால் எங்களால் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே வாங்க முடிந்தது. அது எனது தம்பிக்கு வழங்கப்பட்டது. “எனது இன்னொரு சகோதரரும் அவரது நண்பர் களும் ஆன்லைன் வகுப்புகளுக்கு இணையத்தை அணுக  மலையுச்சிக்கு சென்றுவந்தனர். ஆனால், நான் வீட்டு வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்தினேன். எனது  மூத்த சகோதரி ஷீராசா பானோ அருகிலுள்ள நகரத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். எங்களது குடும்ப  நிலை நாங்களே “வெறுக்கும் அளவிற்கு இருந்தது.” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் செய்த முடிவு முனாசாவிற்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “நான் மீண்டும் பள்ளிக்குச் சென்று  என் நண்பர்களைச் சந்திப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். மன்சூர், ஷீராசா போன்று பணிபுரியும் ஏராளமான குழந்தைகளுக்கு கல்வி அவர்களை கடந்து சென்றுவிட் டது. “எனக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை. நான் என் வேலையிலிருந்து விலகமுடியாது” என்கிறார் மன்சூர். தொற்றுநோயின் நீண்டகால விளைவுகள் காஷ்மீரின் குஜ்ஜர்-பக்கர்வால் சமூகத்தினரிடையே பள்ளி இடைநிற்றல் விகிதத்தை அதிகரிக்கவே செய்யும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனைத்து பட்டியலிடப் பட்ட பழங்குடி (ST) பெண்களில் 79.7 சதவீதம் பேர் குஜ்ஜார்- பக்கர்வால் பெண்கள் ஆனால் அவர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளனர்: 82.2 சதவீதம் பேர் கல்வியறிவற்றவர்கள். இந்த சமூகத்தினரிடையே பாலின இடைவெளி அதிகரித்து வருவதால், பெண்களின் கல்வி தொற்றுநோய் தாக்குதலையடுத்து மேலும் மோசமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் இளைஞர் பிரிவு வழக்கறிஞரும் பழங்குடி சமூக சேவையாளருமான சுஹைல் மெஹ்ராஜ் கூறுகையில், “ஆஃப்லைனில் (நேரடி பள்ளிக் கல்வி) இருந்து ஆன்லைன் கல்விக்கு திடீரென மாறியது இந்த குழந்தைகளுக்கு போதுமான பலனளிக்கவில்லை. இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளிகளில் தான்  சேர்க்கப்படுகிறார்கள். அவர்களது குடும்பத்தின ரால் செல்போன் வாங்க முடியாது. செல்போன் வைத்துள்ள சிலர் டிஜிட்டல் தளங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை” என்றார். “இந்த குழந்தைள் மட்டுமல்ல; முதல் தலை முறை பள்ளி செல்பவர்கள் எப்போது பள்ளியை விட்டு வெளியேறுவோம் என்ற அபாயத்தில் உள்ளனர்” என்றார். 

2001-02 மற்றும் 2010-11 ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலத்தில், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தரவு களின்படி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தை களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் சதவீதம் ஆண்டுக்கு 60.51 சதவீதமாக ஆக உள்ளது. “பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதோடு, படிப்பறிவில்லாத வர்களாகவும் இருப்பதால், இந்தப் பழங்குடியினக் குழந்தைகள் ஏற்கனவே தங்கள் படிப்பை முன்கூட்டியே கைவிடும் அபா யத்தில் உள்ளனர். மேலும் அவர்களின் டிஜிட்டல்  குறைபாடு  கற்பதன் இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது” என்றார் பெயர் கூற விரும்பாத ஒரு பழங்குடி சமூக ஆசிரியர்.  மேலும் அவர் கூறுகையில் “சமூகத்தின் இடை  நிற்றல் விகிதம் செங்குத்தாக அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் பழங்குடி யின குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு திரும்பவரமாட்டார்கள்” என்றார். பஹல்காமில் உள்ள ஓவுரா கிராமத்தில் உள்ள  குடிசை வீடு ஒன்றில் வசிக்கும் 12 வயது சிறுவன் ஜாஹித். நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த, இவர் தனது வீட்டிற்கு அருகில் ஆடுகளை மேய்க்கிறார். இவர் மீண்டும் பள்ளிக்கு செல்ல வாய்ப்பில்லை. தொற்றுநோய் பரவல் காலத்திலிருந்து ஆடு மேய்ப்பது அவரது அன்றாட வேலையாகிவிட்டது.  ஜாஹித் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மொபைல் பருவகாலப் பள்ளிக்குச் செல்வார், ஆனால் 2019-ஆம் ஆண்டு முதல் காஷ் மீரில் மூன்று முறை பள்ளிகள் மூடப்பட்டதால். அவரால் கல்வி கற்க முடியவில்லை.  ஜாஹித்தின் தந்தை, முஷ்டாக்கான் குதிரை ஒட்டுநர். அவர் சுற்றுலாப் பயணிகளையும், மலை யேற்றப் பயணிகளையும் குதிரையில் மேல்நோக்கி  அழைத்துச் சென்று வருகிறார்.

தொற்றுப்பரவல் காரணமாக கடந்த இரண்டு  ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப் பட்டது, அதனால் அவருக்கு வருமானம் இல்லை. மகன் ஜாஹித் ஆடுகளை மேய்க்கிறான். நானும் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியை தேடிவேண்டியதாயிற்று. என்கிறார் முஷ்டாக். ஆர்வமாக பள்ளிக்குச் செல்வதை வழக்க மாகக் கொண்டிருந்த ஜாஹித்-திற்கு ஆன்லைன் கல்வி ஏனோ சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆன்லைன் கல்வி எங்களைப் போன்ற ஏழை களுக்கு இல்லை என்றார் சிறுவன் ஜாஹித்.  எங்கள் குடும்பத்தில் ஒரு போன் உள்ளது, அதுவும் கூட (Touch Screen) தொடு தொலை பேசி அல்ல. இப்போது நான் தவறவிட்ட பாடங்களை என்னால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. நான் ஆடுகளை  வளர்ப்பது, மேய்ப்பது  எனது குடும்பம் நன்றாக சாப்பிட உதவுகிறது.  நான் இப்போது செய்யும் வேலையால் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். பழங்குடியின மக்கள் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் ஜாவைத் ராஹி, “மன்சூர், முனாசா மற்றும் ஜாஹித் போன்ற குழந்தைகளுக்கு கல்வி  தொடர்ந்து கிடைப்பதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் கல்வி, பழங்குடி மக்களின் எண்ணம், கல்வியில் நடைமுறைக்கு மாறான அணுகுமுறை ஆகியவை கொரோனா பரவலை யொட்டி பள்ளி இடைநிற்றல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்” என்றார்.