திருவாரூர் மாவட்டம் 94.35 சதவீதம் தேர்ச்சி
திருவாரூர், மே 8 - திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு 12 ஆம் வகுப்பில் 94.35 சதவீதத்துடன் மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 12,233 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11,386 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு தேர்ச்சி 93.08 சதவீதம். இந்தாண்டு திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12,956 மாண வர்களில், 12,225 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 94.35. திருவா ரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என 126 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 28 பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகள் 78 உள்ளன. இதில் 5 பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாபநாசம் பள்ளிகள் சாதனை
பாபநாசம், மே 8 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 71 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில், 70 பேர் தேர்ச்சி பெற்றனர். பாலமுருகன் 579 மதிப்பெண் பெற்று முதலிடமும், மது மிதா 571 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், ஸ்வேதா 549 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் கலியமூர்த்தி, பள்ளி முதல்வர் தீபக் ஆகியோர் பாராட்டினர். பாபநாசம் அரசி னர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 208 மாண விகள் தேர்வெழுதியதில் 200 பேர் தேர்ச்சி பெற்றனர். பிரித்திகா 540 மதிப்பெண் பெற்று முதலிடமும், ராகினி 536 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், ஷீலா 532 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். பாபநாசத்தை அடுத்த ராஜகிரி ஹிதாயத்துன் நிஸ்வான் பொது அரபி மகளிர் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்வெழுதிய 21 மாணவி களும் தேர்ச்சி பெற்றனர். ரிபானா 547 மதிப் பெண் பெற்று முதலிடமும், பர்ஹானாபேகம் 533 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், சமீரா 450 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்ற னர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயசுதா உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். 16 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹரிராஜா 504 மதிப்பெண் பெற்று முதலிடமும், அருண்குமார் 497 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், அசாருதீன் 487 மதிப் பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். 101 மாணவர்கள் தேர்வெழுதியதில், 63 பேர் தேர்ச்சி பெற்றனர். வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 235 பேர் தேர்வெழுதியதில் 225 பேர் தேர்ச்சி பெற்ற னர். கீர்த்திகா 559 மதிப்பெண் பெற்று முதலிட மும், மஞ்சுளா 556 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், 528 மதிப்பெண் பெற்று முகமது இப்ரா கிம் மூன்றாவது இடமும் பெற்றனர்.