tamilnadu

img

மதுரை - திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு

வியாபாரிகள் போராட்டம் சிஐடியு பங்கேற்பு

திருமங்கலம், நவ.22- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற  வலியுறுத்தி, திருமங்கலத்தில் செவ்வாயன்று வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட் டம் நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுரை- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வரு கிறது. விதிகளின்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து நான்கு கிலோ மீட்டருக்கு  அப்பால் சுங்கச்சாவடி இருக்க வேண்டிய நிலை யில், நகராட்சி எல்லையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், திருமங்கலம் நகர், தே.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த உள்  ளூர் வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.

இதுதொடர்பாக, கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடி விதி முறைக்கு புறம்பாக உள்ளதைக் கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூ லிப்பதைக் கண்டித்தும் செவ்வாயன்று திரு மங்கலம் நகர் பகுதியில் கடையடைப்பு போராட்  டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்  டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்  கப்பட்டது.  போராட்டக்குழு அறிவித்தபடி செவ்வா யன்று திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள சுமார்  1000 கடைகள் அடைக்கப்பட்டன. திருமங்க லத்தில் உள்ள தினசரி சந்தையும் அடைக்கப்பட்  டது. தினசரி சந்தையில் மட்டும் 200 கடைகள் உள்ளன. கடைகளை அடைத்த வர்த்தகர்கள் திரு மங்கலம் ராஜாஜி சிலை முன்பு கண்டன ஆர்ப்  பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், சிஐ டியு மார்க்கெட் வியாபாரிகள் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் அப்துல் ஹமீது, ராஜேந்திரன், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதய குமார், ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலை வர் ஜெயராமன் மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்பு  ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவ டிவை அகற்றக் கோரியும், திருமங்கலம் நகர்,  டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நிரந்தரமாக கட்டண விலக்கு  அளிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.  போராட்டம் குறித்து திருமங்கலம் மார்க் கெட் வியாபாரிகள் சங்க (சிஐடியு) நிர்வாகி ராஜேந்திரன் கூறியதாவது:  இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தாவது ஒன்றிய அரசு உடனடியாக சுங்கச் சாவடியை  அகற்ற வேண்டும். இதற்கு தமிழக அரசும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். கடைய டைப்பைத் தொடர்ந்து சுங்கச்சாவடியை முற்று கையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதி நவ .27-ஆம் தேதி முடிவு செய்  யப்படும். இது மதுரை மாவட்டத்தின் பிரச்சனை மட்டு மல்ல விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலி ருந்து வரும் வாகன ஓட்டிகளின் பிரச்சனையு மாகும் என்றார். மேலும் அவர் கூறுகையில் இந்தப் போராட் டத்தில் மோட்டார் வாகன சங்க நிர்வாகி அருண், கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள  தொழிலகங்கள் சார்பில் ரகுநாதராஜா, மார்க் கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் (சிஐடியு)  அப்துல்ஹமீது, நகர் வியாபாரிகள் சங்க நிர்  வாகி மணிசேகர், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஜெயராமன், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் விஜயராகவன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.