tamilnadu

img

இந்துத்துவா மதவெறி - கார்ப்பரேட் கூட்டுக்கு எதிராக வலுவான – விரிவான ஒற்றுமையைக் கட்டுவோம்!

விழுப்புரம், ஜன. 4 - இந்துத்துவா மதவெறி - கார்ப்பரேட்டு களுக்கு எதிராக, நாட்டில் வலுவான – விரி வான ஒற்றுமையை உருவாக்குவோம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிர காஷ் காரத் அறைகூவல் விடுத்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒருபோதும் சமரசம் இல்லை என்றும் அவர் முழங்கினார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரை வருமாறு: ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக, ஒன்றிய அரசின் ஆட்சி யதிகாரத்தில் இருக்கும் காலகட்டத்தில் தான்,  இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்  கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள வைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் பான்மையை அடைய முடியவில்லை. ஆனாலும் கூட 3-ஆவது முறையாக மோடி  தலைமையில் அமைந்திருக்கும் இந்த ஆட்சி ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பிற்போக்கான நிகழ்ச்சி நிரலை, மோசமான கொள்கை களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

தீவிர மதவெறி நடவடிக்கைகள்

இந்துத்துவா மதவெறி சித்தாந்தத்தை இந்தியாவில் ஆழமாக பதியச் செய்வது என்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருத வைக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். பாஜக அரசின் கொள்கைகள் வகுப்புவாதம் சார்ந்த தாக, மதவெறி அரசியலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளக்கூடிய மாநிலங்களும் ஆர்.எஸ்.எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அமல் படுத்தக் கூடிய பாதையில் தீவிரமாகச் சென்று  கொண்டிருக்கின்றன. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கக் கூடிய நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். மசூதிகளுக்கு அடியில் இந்துக் கோவில்கள் இருந்தன என்று திட்டமிட்டு சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அண்மை யில் உத்தரப்பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் 500 ஆண்டுகளாக இருக்கக் கூடிய மசூதிக்கு கீழே கோவில் இருந்தது, இருக் கிறது என்று ஓரு ஆய்வை நடத்தத் துவங்கி, அதன் மூலம் உருவான மோதலில் 5 இளை ஞர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள் என்ற துயரச் சம்பவம் நடந்தது.

பரந்துபட்ட ஒற்றுமை தேவை

இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று மத அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்துக்களை எல்லாம் ஒருமுகப் படுத்துகிற சூழ்ச்சிகளை பாஜக மேற் கொண்டு வருகிறது. மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி இந்துக்களின் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்வதற்கான பல்வேறு உத்தி களைக் கடைப்பிடிக்கிறார்கள். அதை எதிர் கொள்ளக்கூடிய விதத்தில் நம்முடைய அர சியல் அமைய வேண்டும். பரந்த அளவில் மக்கள் ஒற்றுமையை கட்டியமைக்க வேண் டும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.,  பாஜகவின் பிற்போக்கான - மத அடிப்படை யில் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்ப தற்கு பரந்துபட்ட ஒற்றுமை தேவை. அதை நோக்கி நம்முடைய பயணம் முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது. 

கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை

மத அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்தி அரசியல் செய்வது ஆர்.எஸ்.எஸ். - பாஜக நிகழ்ச்சி நிரலின் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிப்பதாகும். ‘பாஜக அரசு ஒரு இந்துத்துவா - கார்ப்பரேட் ஆதரவு அரசு’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரை யறுத்துள்ளது. அவர்களது அனைத்து கொள்கைகளுமே கார்ப்பரேட்டுகளுடைய நலன்களுக்கு சேவை செய்யக் கூடிய கொள்கைகளாக உள்ளன. இதனால் நாட்டில் சமத்துவமின்மை, பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கையின் முழுப்பயனும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மிகப்பெரிய முதலாளிகளுக்கு, பெரும் பணக்காரர்களுக்கு, அவர்களின் செல்வங்களை - சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்குத்தான் வழிவகுக்கின்றன.

5 பெரும் குழுமங்கள்

இந்தியாவில் பெரிய கார்ப்பரேட்டுகள் என்றால் அம்பானி, அதானி, பிர்லா, டாடா,  பார்தி மிட்டல் குழுமம் ஆகிய 5 நிறுவனங் கள் தான். இந்தியாவில் கார்ப்பரேட்டுகள் வைத்திருக்கக் கூடிய செல்வத்தில், சொத்தில் 20 விழுக்காடு இந்த 5 நிறுவனங் களின் கையில் மட்டுமே உள்ளது. பாஜக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் செல்வங் கள் ஓரிடத்தில் குவிகின்றன என்பதற்கு உதா ரணம் இது. இப்படிப்பட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை உழைப்பாளி மக்களின் தோள்களில், தலையில் ஏராளமான பொருளாதாரச் சுமைகள் ஏற்றி வைக்கப்படும். இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதுபோன்ற மக்கள் விரோத - தொழிலாளர் விரோதக் கொள்கைகளை, மக்களை அணி திரட்டி முறியடிக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

தமிழ்நாட்டில் சிபிஎம் நிலைபாடு

பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும், தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து நிறைவேற்றி வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 2019-ஆம்  ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்த லில், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேர வைத் தேர்தலில், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை தமிழகத்தில் தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இருக்கக் கூடிய கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கரம் கோர்த்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.  பன்மைத்துவத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியைத் திணிக்கும் முயற்சியை பாஜக  அரசு மேற்கொள்ளும் போது, பாடத்திட்டத் தில் மதவெறி அரசியல் கருத்துக்களை இணைக்கும் போது, மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக  அரசு நிற்கும் போது, அதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து  நிற்கிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மத்தியதர வர்க்க ஊழியர்களின் வாழ்வாதாரத்தை, உரிமைகளைப் பாதிக்கக்கூடிய எந்த நட வடிக்கை மேற்கொண்டாலும் அதை எதிர்த்து உறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது, அதை எதிர்த்த போராட்டங்களில் இணைந்து நின்று ஆதரவு அளிக்கிறோம். 

சாம்சங் போராட்டம்

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனமான, ‘சாம்சங்’ நிறு வனத்தில், தொழிலாளர்கள் விருப்பப்படி தொழிற்சங்கம் அமைக்க வேண்டும், கூட்டுப் பேர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று முயற்சித்த போது, அந்த நிறுவனம் அதை தடுத்தது. எனவே, தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, கூட்டுப்பேர உரிமை கேட்டு 38 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முத்திரை பதித்த போராட்டமாகவும் அமைந்தது. இப்படி ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்ற போது, திமுக அரசின் நிலை பாடு என்னவாக இருந்தது என்றால், தொழி லாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமையை அனுமதித்தால், அது மூலதனம் தமிழகத்திற்கு வருவதை தடுத்து விடும் என்ற அச்சம் கொண்டதாகவே அரசின் நிலைபாடு இருந்தது. சங்கம் அமைத்த பிறகு, தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யக் கூட அரசு இதுவரை மறுத்து வரு வது கவலைக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும், மறுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டால், அதில் ஒரு அங்குலம் கூட சமரசம் செய்ய மாட்டோம். இறுதி வரை அந்தப் போராட்டத்திற்கு அனைத்து ஆதரவையும் அளிப்போம். அதைத்தான் சாம்சங் போராட்டத்தில் மேற்கொண்டோம்.

இடது மாடல்

திமுக அரசின் கவனத்திற்கு ஒரு விஷ யத்தைக் கொண்டு வர விரும்புகிறோம். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருப்பதால், நமக்கு ஆட்சி நடத்தத் தெரியாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 3 மாநிலங்களில் தொடர்ச்சியாக ஆட்சி நடத்தி யிருக்கிறோம். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு, முதலமைச்சராக தோழர்  ஜோதிபாசு (நான்காவது முறையாக) பொறுப்பேற்ற போது, 1998-ஆம் ஆண்டு  புதிய தொழிற்கொள்கை உருவாக்கப் பட்டது. எப்படி தமிழ்நாட்டு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாரோ, அதேபோல் மேற்கு வங்கத்தில் தொழில்கள் வர வேண்டும், தொழிலாளர்கள் வளம்பெற வேண்டும் என்பதற்காக, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜோதிபாசுவும் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்று விட்டு மேற்கு வங்கம் திரும்பிய ஜோதிபாசுவை செய்தியாளர்கள் சந்தித்து, முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றீர்களே என்ன ஆனது எனக் கேட்டனர். ஆமாம் உற்பத்தித் துறையில் முதலீடுகள் வேண்டும் என்று கேட்பதற்காக சென்றோம்; ஆனால் அதோடு ஒரு நிபந்தனை யையும் முதலீட்டாளர்களுக்கு விதித்தோம். தாராளமாக மேற்கு வங்கத்தில் வந்து முதலீடு செய்யலாம் தொழில் தொடங்க லாம்; அந்த உரிமை உங்களுக்கு உண்டு. அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை உணர்ந்து, இங்குள்ள தொழி லாளர் நலச்சட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை என்று தெரிவித்தோம். உண்மையில் அதுதான் சிறந்த மாடல். அந்த மாடலை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வர்க்கப் பிரச்சனைகளில்  சமரசமற்ற போராட்டம்

அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங் களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் சமூகப் பிரச்சனைகளி லும் தலையிடுகிறது. குறிப்பாக சாதியப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்க, நியாயம் கிடைக்க எழுச்சியான போராட்டங் களை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் பிரிவுகள் உண்டு. அந்த சாதிக்கு கிடைக்கும் எல்லாவித மான உரிமைகளும், பலனும், அதற்குள் இருக்கும் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவின ருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் அருந்ததியர் மக்களின் அமைப்புகளோடு இணைந்து தமிழ கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத் திய மகத்தான போராட்டத்தின் விளைவாக, அருந்ததிய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு கிடைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை அரசியல் - பொரு ளாதார - சமூக தளங்களிலே உழைப்பாளி மக்கள் சந்திக்கிற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் தலையிடுகிறோம். மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய போராட்டங் களை முன்னெடுக்கிறோம். அதன் மூலம் முற்போக்கான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

விரிவான ஒற்றுமையை கட்டுவோம்

எதிர்காலத்தில் மக்கள் பிரச்சனைகளில் கூடுதலாக தலையிடுவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சொந்த பலம், சுய அடையாளம் இன்னும் அழுத்தமாக அதிகரிப்பதற்கான ஒரு எதிர்காலத் திட்டத்தை, உத்தியை இந்த மாநில மாநாடு வகுக்கும். தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகளோடு ஒன்றுபட்ட போராட்டங்கள், கூட்டு இயக்கங்களை அதி கரிப்பதற்கான உத்திகளை மேற்கொள் வோம். ஆர்.எஸ்.எஸ். - பாஜகவைப் பின்னுக்குத்தள்ள விரிவான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து களம் காணும் உத்திகளை வகுப்போம். தமிழ கத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். அவரது உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். 

சைகை மொழியாக்கம்

மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் அரங்கத்தை சேர்ந்த ஏராளமான தோழர்கள் பங்கேற்று இருந்தார்கள். அவர் களுக்காக பொதுக்கூட்டத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை சைகை மொழியாக்கம் இடம் பெற்றது. 2 மணி நேரத்திற்கு மேலாக தலைவர்களின் உரைகள் அனைத்தையும் சைகை மொழிபெயர்ப்பாளர் எஸ்.மகா லட்சுமி தொடர்ந்து மொழியாக்கம் செய்தது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரை யும் கவர்ந்தது. அவரது சிறப்பான பணியை தோழர்களும் தலைவர்களும் பாராட்டினார்கள்.