பட்டியூர் நாட்டில் பஞ்சம். மழை பொய்த்து விட்டது. வேலையில்லை. மக்கள் சாப்பிடவே சிரமப்பட்டார்கள். எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால் பட்டியூர் ராஜா பராக்கிரமன் எல்லாப்பொருட்களுக்கும் வரி போட்டார். வரி கட்ட முடியவில்லை என்றால் வரிக்கு வரி போட்டார். மக்கள் அவரிடம் முறையிட அரண்மனைக்குப் போனார்கள். அரண்மனை தங்கத்தால் இழைக் கப்பட்டிருந்தது. வெள்ளியில் நீரூற்றுகள் கட்டப்பட்டிருந்தன. வைரங்களையும் வைடூரியங்களையும் ரத்தினங்களையும் பவளங்களையும் பாதைகளில் பதித்தி ருந்தார்கள். மரங்களில் முத்துக்களைத் தோரணமாகக் கட்டித் தொங்க விட்டி ருந்தார்கள். அரண்மனையில் ராஜா பராக்கிரமன் இல்லை. அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் போயிருப்பதாகச் சொன்னார்கள். எப்போது வருவார் என்று தெரியாது என்று வாயிற்காப்போன் சொன்னான். அரண்மனை வாசலில் அவருடைய சட்டை யணியாத முழு உருவப்படம் சிரித்தபடி இருந்தது. ராஜா எப்போதும் எப்போதும் சட்டை அணிய மாட்டார். உடற்பயிற்சி நிலையத்திற்குப் போய் உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுடலாக்கி வைத்தி ருந்தார். உருண்டு திரண்ட தோள்கள், விரிந்த மார்பு, தூண்களைப் போன்ற கால்கள் கொண்ட பயில்வானாக இருந்தார். நாடு முழுவதும் பளு தூக்கிய படியோ, கர்லாக்கட்டை சுழற்றியபடியோ, தண்டால் எடுத்தபடியோ, பஸ்கி எடுத்த படியோ பெரிய பெரிய விளம்பர பதாகை கள் இருந்தன. அவர் நாட்டில் இருக்கிறாரோ இல்லையோ தினமும் அவர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்
“எனதருமை மக்களே, நாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரி யும். இதற்குக் காரணம் நீங்கள் போன பிறவியில் செய்த பாவங்கள் தான். எனவே பாவங்களைப் போக்க இனி தின மும் பஜனைகள் செய்யுங்கள். நீங்கள் பஜனைகள் செய்வதற்காக நாடுமுழு வதும் கோயில்களை, சர்ச்சுகளை, மசூதி களைக் கட்டுவேன்.. உங்கள் பாவம் தொலைய மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அருள் கிடைத்து விட்டால் நாடு வளம் பெறும்… பஞ்சம் பசி, பட்டினி எல்லாம்தொலையும். நாம் அனைவருமே பெரியாணி, சின்னானி போல பணக்காரராகி விடுவோம்.. வாழ்க பட்டியூர்! “ என்று முழக்கமிட்டார். மறுநாளே நாடுமுழுவதும் இது வரை பெயர் தெரியாத கடவுள்கள் உரு வானார்கள். அவர்களுக்குப் பிரம்மாண்ட மான கோவில்கள் கட்டப்பட்டன. சர்ச்சு கள் கட்டப்பட்டன. மசூதிகள் கட்டப்பட்டன. எல்லாக்கோவில்களைச் சுற்றிலும் சாமி யார்கள், பாதர்கள், மௌல்விகள் தோன்றி னார்கள். ஜோசியர்கள், குறிசொல்ப வர்கள் தோன்றினார்கள். அவர்கள் மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் சொன்னார்கள். பரிகாரம் என்பது இன்னொரு கோவிலாகவோ சர்ச்சாகவோ மசூதியாகவோ இருந்தது. நாடு முழுவதும் கோவில்கள் நிறைந்து விட்டன. எப்போதும் கோவிலிலேயே சிறப்பு பூசை, ஆராதனை, பிரார்த்தனை என்று கோவிலிலேயே மக்கள் கிடந்தனர். நம்முடைய கஷ்டத்தையெல்லாம் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் தீர்த்து விடும் என்று நம்பினார்கள். எனவே போட்டி போட்டுக் கொண்டு கடன் வாங்கி பூசை கள் செய்தார்கள். காணிக்கை போட்டார் கள். நன்கொடை அளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
நாட்டின் நிலைமை இன்னும் மோசமா னது. ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத வர்களுக்கு இப்போது இரண்டு வேளை கிடைக்கவில்லை. இரண்டு வேளை உண வில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை. வேலையில்லை. விவசாயப்பொருட்க ளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவ சாயிகள் கோபப்பட்டார்கள். ராஜா பராக்கி ரமன் தன்னுடைய படத்தை அனைத்து வீடு களிலும் ஒட்டி வைக்க வேண்டும். தான் ஒரு தெய்வப்பிறவி என்றும் சொன்னான். அப்போது தென் திசையிலிருந்து ஒரு வயதான கிழவர் தன்னுடைய கைத்தடி யை ஊன்றிக் கொண்டு வந்தார். மக்களிடம் அவர்களுடைய அறிவை நம்பச்சொன் னார். சிந்திக்கும்படி தூண்டினார். எதை யும் ஏன்? எதற்கு என்று கேளுங்கள் என்று சொன்னார். மூடநம்பிக்கைகளை கைவிடச் சொன்னார். உன் அறிவை நம்பு, எதையும் கேள்வி கேள் என்று சொன்னார்.மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந் தது. அவர்கள் ஒன்று திரண்டார்கள். பட்டி யூர் ராஜா பராக்கிரமனின் அரண்மனை யைக் கைப்பற்றினார்கள். அதிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று தொழிற்சாலைகள் கட்டினார்கள். அரண்மனை பல்கலைக்கழகமானது. நாட்டில் இருந்த கோவில்களை அறிவி யல் ஆராய்ச்சி கூடங்களாகவும், பள்ளிக் கூடங்களாகவும் மாற்றினார்கள். பெரி யாணி சின்னானியின் சொத்துகளைப் பிடுங்கி அவர்களையும் எல்லாரையும் போல வேலை பார்க்கச் சொன்னார்கள். நம்பிக்கையாளர்களுக்காக ஊருக்கு ஒரு கோவிலை மட்டும் விட்டு வைத்தார் கள். இப்போது பட்டியூர் அறிவூராக மாறிவிட்டது. முன்னாள் ராஜாவாக இருந்த பராக்கிர மன் என்ன ஆனான்? என்று கேட்கிறீர் களா? அறிவை நம்பு. எதையும் ஏன் எதற்கு என்று கேள் என்று வீட்டில் உட்கார்ந்து...