சென்னை, அக். 23 - அகவிலைப்படியை 106 மாதங்களாக உயர்த்தாததை கண்டித்து சென்னையில் புதனன்று (அக்.23) ஓய்வூதிய நம்பக அலுவல கத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து ஓய்வூதியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022 டிசம்பர் மாதம் முதல் ஓய்வு பெறு வோருக்கு வழங்காமல் உள்ள ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையை வழங்க வேண்டும், ஒப்படைப்பு தொகையை வழங்காமலேயே விதிகளுக்கு புறம்பாக மாதாமாதம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஓய்வூதியர் வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், அரசு மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு உள்ளதுபோல் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 850 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலா ளர் க.கர்சன், “அரசு மற்றும் பொதுத்துறை களில் ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர் களுக்கு ஓய்வுக்கால பணப்பலன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் 24 மாதங்களாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. 106 மாதங்களாக அகவிலைப்படியை உயர்த்த அரசு மறுக்கிறது. இதுதொடர்பான வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, வெவ்வேறு பெயர்களில் நிர்வாகம் மேல்முறையீடு செய்கிறது. டாஸ்மாக் கடை மதுபாட்டில்களுக்கு 717 கோடி ரூபாய்க்கு அரசு காப்பீடு செய்கிறது. போக்குவரத்து கழக ஓய்வூதியர் களுக்கு காப்பீடு செய்ய மறுக்கிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி அரசு முன் பணம் செலுத்துகிறது. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.25 கோடியை ஒதுக்க மறுக்கிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்த அரசு அமல்படுத்த மறுக்கிறது. இவற்றையெல்லாம் கண்டித்துதான் இந்த போராட்டம் நடக்கிறது” என்றார். முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற வர்களை காவல்துறையினர் கைது செய்த னர். வாகன ஏற்பாடு இல்லாததால், பெரும் பகுதியினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்து ஓய்வூதியர்கள் போராட்டத்தை தொடர்ந்த னர். அதன்பிறகு வாகன ஏற்பாடு செய்து அனைவரையும் கைது செய்தனர். அமைப்பின் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத் தில் பொருளாளர் ஏ.வரதராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் தேவராஜ், செல்வராஜ், கே.வீரராகவன், சண்முகம், சென்னை கிளைத் தலைவர் குருசாமி உள்ளிட்டோர் பேசினர்.