tamilnadu

img

‘மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்ததை பெருமையாகக் கருதுகிறோம்’

கள்ளிக்குடி, (மதுரை) ஜூன் 8- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் 36 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்வில்  புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சொ.பாண்டியன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், கட்சியின் தாலுகா செயலாளர் பி.ராஜேந்திரன், எஸ். விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது. இணைந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்.  கட்சியில் இணைந்தவர்களிடம் பேசியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததை பெருமையாகக் கருது கிறோம்.  சிவரக்கோட்டை பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் வருவதைத் தடுப்பதற்காக நடத்திய போராட்டங்கள், குறிப்பாக  திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள்.  வெற்றியும் பெற்றார்கள். விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் களுக்காக போராடி வருகின்றனர் எனக் கூறினர்.  கள்ளிக்குடி பகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.