tamilnadu

சர்வதேச திரைப்பட விழா: திரையரங்கு, காட்சிகள் அதிகரிக்கப்படுமா?

சென்னை, ஜன. 1 - 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிச.30 அன்று தொடங்கியது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இத்திரைப்பட விழாவின்போது தேவி, சத்தியம், அண்ணா, காசினோ என பல்வேறு திரை அரங்குகளில் படங்கள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே திரைப்படக்கள் திரையிடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.  இதனால் பார்வையாளர்கள் இருக்கைகளை பெற 2 மணி நேரத்திற்கு முன்பே சென்று  வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அவ்வாறு நின்றாலும் முதல் 150 பேருக்கு இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. எனவே, திரை அரங்குகளில் எண்ணிக்கையும், கூடுதல் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பார்வையாளர்கள் கோருகின்றனர்.