உலகப் பொருளாதாரத்தின் ‘பைபிள்’ என்று சொல்லக்கூடிய-
‘டாஸ்கேப்பிடல்’ அதாவது ‘மூலதனம்’ என்ற புத்தகத்தை
எழுதிய-
காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை.
இவருடைய நண்பர் –
பிரடெரிக் ஏங்கல்ஸ், நட்புக்கு சிறந்த உதாரணமாக இவர்கள் –
இருவரையும் சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்தபோது –
ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு ஒரு சாட்சி…..
இதோ –இந்த மார்ச் 14
மதியம் 3 மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக்கொண்டு
இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில்
விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் அவன் – நாற்காலியில்
உறங்கி போய் இருந்தான். இனி விழிப்பே இல்லாத
தூக்கத்தில்… ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள்
புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் சிறப்பு மதிப்பிட முடியாது.
டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டறிந்தாரோ
அதே போல் மார்க்சும் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை
கண்டறிந்தான்.
அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன்
உண்ண உணவு, அருந்த நீர், இருக்க இடம், உடுத்த உடை
ஆகியவற்றை மானிடம் பெறவேண்டும் என்று இவர் உலகிற்கு
சொன்னது எளிய உண்மைதான்.
ஆனால், அதோடு முதலாளித்துவ
அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்கு பணிந்து
செல்கிறது என்ற உண்மையும் வெளிச்சம் போட்டுக் காட்டினான்.
தன்னை புரட்சிக்காரன் என்று அடையாளப்படுத்துவதில் தான் இவனுக்கு
விருப்பம். முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் –
தூக்கி எறிந்து விட்டு, பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் –
அமர வைக்க விரும்பி பாடுபட்டவன். போராட்டம் எனும் ஆயுதம்
கொண்டு தன் இறுதிமூச்சு வரை உழைத்தவன்.
எத்தனையோ பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம்
சுமத்தலாம், பழி போடலாம். ஆனால் அவன் பாட்டாளியை –
நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான்.
மார்க்ஸ் பிறக்கும்போது யூதனாகப் பிறந்தான். புரட்சிக்காரனாக
வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்திருக்கும்.
அவன் எழுத்துக்களும்……
இப்படி தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சி பூர்வ
உரையாற்றினார். உலகப் பொருளாதாரத்தின் சூத்திரம்
சொல்லும் புகழ் பெற்ற ‘டாஸ்கேப்பிடல்’ புத்தகம் இன்று பல
பதிப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. அந்தப் புத்தகத்தை
தன் உயிரினும் மேலான் நண்பர் ஏங்கல்ஸுக்கு அர்ப்பணித்து
இருந்தார் மார்க்ஸ்.